கடலூர்- டாஸ்மாக் லாரி கவிழ்ந்து விபத்து – சரக்கு பாட்டில்கள் சேதம்!

 

கடலூர்- டாஸ்மாக் லாரி கவிழ்ந்து விபத்து – சரக்கு பாட்டில்கள் சேதம்!

கடலூர்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே டாஸ்மாக் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டத்தில் சரக்கு பாட்டில்கள் சேதம் அடைந்தன.

கடலூர்- டாஸ்மாக் லாரி கவிழ்ந்து விபத்து – சரக்கு பாட்டில்கள் சேதம்!

கடலூர் மாவட்ட டாஸ்மாக் மதுபான கிடங்கில் இருந்து, காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில் சப்ளை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் மதுபானங்களை ஏற்றி வந்த லாரி காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி கரை ஓரம், சின்ன மணல்மேடு என்ற இடத்தில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கடலூர்- டாஸ்மாக் லாரி கவிழ்ந்து விபத்து – சரக்கு பாட்டில்கள் சேதம்!

எதிரே வந்த லாரிக்கு வழி விடும்போது, மதுபான லாரி இடதுபுறம் கவிழ்ந்தது. அந்த லாரியில், சுமார் ஒரு கோடி மதிப்புள்ள மது பாட்டில்கள் இருந்தன.

லாரி கவிழ்ந்தது மதுபாட்டில்கள் சிதறியதால், பொதுமக்கள் மற்றும் மது பிரியர்கள் லாரியை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறைடினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் கிளீநர் இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.