கடலூர் அருகே வாழைத் தோட்டத்தில் பதுக்கிய ரூ.11.38 லட்சம் பறிமுதல்!

 

கடலூர் அருகே வாழைத் தோட்டத்தில் பதுக்கிய ரூ.11.38 லட்சம் பறிமுதல்!

கடலூர்

கடலூர் அருகே வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வாழைத் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த ரூ.11 லட்சத்து 38 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எஸ்.புதூர் பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்தில் நேற்று வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைத்திருப்பதாக, பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சிதம்பரம் தனி வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில் குழுவினர், குறிப்பிட்ட வாழைத் தோட்டத்திற்கு விரைந்து சென்றனர்.

கடலூர் அருகே வாழைத் தோட்டத்தில் பதுக்கிய ரூ.11.38 லட்சம் பறிமுதல்!

அப்போது, வாழைத் தோட்டத்தில் நின்றிருந்த 10-க்கும் மேற்பட்டவர்கள், அதிகாரிகள் வருவதை கண்டு தப்பியோடினர். அதிகாரிகள் சென்று பார்த்தபோது, அங்கு பிளாஸ்டிக் பைகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து, அந்த பைகளில் இருந்து சுமார 11 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர், பறிமுதல் செய்த பணம் குறிஞ்சிப்பாடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான ஜெயக்குமாரிடம் ஒப்படைக்கப் பட்டது. மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார், வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.