கடலூர்- தொடர் மழையால் நெற்பயிர்கள் நாசம்- கவலையில் விவசாயிகள்!
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நாசமடைந்தால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே நெடுஞ்சேரி கிராமத்தில் இறாங்காடு பகுதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சம்பா பயிர்கள் நடவு செய்யப்பட்டன. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன.
வாய்க்கால்கள்ள் தூர்வாரப்படாததால், மழைநீர் வெளியே செல்ல வழி இல்லாமல் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் கூறினர். உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள், வடிகால் நீரை
வெள்ளாறுக்கு திருப்பி விட ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர் மழையால் நெற்பயிர்கள் நாசம்- கவலையில் விவசாயிகள்!#Farmers #crops #heavyrain #agriculture #farming #TTN pic.twitter.com/SIyAxryxhs
— Top Tamil News (@toptamilnews) October 5, 2020
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.