தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி; பாதிக்கப்பட்ட பெண்கள் புகார்

 

தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி; பாதிக்கப்பட்ட பெண்கள் புகார்

கடலூர்

கடலூரில் தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை கைதுசெய்யக் கோரி, பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட எஸ்.பி-யிடம் புகார்
அளித்தனர். கடலூர் பழைய வண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயரங்கன். இவரும், இவரது குடும்பத்தினரும் கடந்த ஆண்டு தீபாவளி சிறுசேமிப்பு சீட்டு நடத்தி முறையாக பணத்தை வழங்கியதாக கூறப்படுகிறது.

தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி; பாதிக்கப்பட்ட பெண்கள் புகார்

இதனால், இந்த ஆண்டு தீபாவளி சிறுசேமிப்பு திட்டத்தில் கடலூர், பரங்கிப்பேட்டை, முதுநகர் ஆகிய பகுதிகளில் 36-க்கும் மேற்பட்ட குழுக்களாக ஆயிரக்கணக்கான பெண்களை இணைத்து மாதம்தோறும் பணம் வசூலித்து வந்துள்ளனர்.

தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி; பாதிக்கப்பட்ட பெண்கள் புகார்

இதனிடையே தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சீட்டுப்பணம் செலுத்தியவர்கள் அதனை திருப்பிகேட்க சென்றுள்ளனர். அப்போது அவரது வீடுபூட்டி இருந்ததுடன், செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி; பாதிக்கப்பட்ட பெண்கள் புகார்

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட 36 குழுக்களை சேர்ந்த பெண்கள் இன்று எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.