கடலூர்- அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த தந்தை, மகன் கைது

 

கடலூர்- அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த தந்தை, மகன் கைது

கடலூர்

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் அனுமதியின்றி 5 ஏர்கன் துப்பாக்கிகளை வைத்திருந்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பம் பகுதியில் உள்ள தைல மரத்தோப்பில் நேற்று சந்தேகத்திற்கிடமான வகையில் இருவர் 5 துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்ற நிலையில், அவர்களை கண்டதும்

கடலூர்- அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த தந்தை, மகன் கைது

இருவரும் தப்பியோடியுள்ளனர். அவர்கள் இருவரையும் விரட்டிப்பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் பரங்கிப்பேட்டை கலிமாநகரை சேர்ந்த முகமது அலி(52) மற்றும் அவரது மகன் பக்ரூதின் 28 என்பதும், அவர்கள் வைத்திருந்த 5 துப்பாக்கிகளுக்கு முறையான அனுமதி

கடலூர்- அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த தந்தை, மகன் கைது

பெறவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைதுசெய்த போலீசார், 5 ஏர்கன் துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பரங்கிபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.