தோனிக்கு CSK தந்த ஸ்பெஷல் பரிசு – உற்சாகத்தில் தோனி

 

தோனிக்கு CSK தந்த ஸ்பெஷல் பரிசு – உற்சாகத்தில் தோனி

இன்னும் ஒரே ஒருநாள் மட்டுமே உள்ளது ஐபிஎல் திருவிழா தொடங்குவதற்கு. அதுவும் முதல் மேட்ச்சில் தோனியின் ஆட்டத்தை இல்லை.. இல்லை மைதானத்தில் அவர் நிற்பதைப் பார்க்க அவரின் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் எதிரணியோடு மோதவிருக்கிறது. மூன்று முறை ஐபிஎல் கோப்பை வென்ற அணி இது.

தோனிக்கு CSK தந்த ஸ்பெஷல் பரிசு – உற்சாகத்தில் தோனி

இந்த ஆண்டில் பல முன்னனி வீரர்களும் முன்னாள் வீரர்களும் கோப்பையை வெல்லும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத்தான் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முக்கியக் காரணம் கூல் கேப்டன் ’தல’ தோனி என்றால் நிச்சயம் அது மிகையல்ல. இப்படி அணிக்கு வெற்றியை அளிக்கும் தோனிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஸ்பெஷல் பரிசு அளித்து மகிழ்ச்சிப் படுத்தியிருக்கிறது.

தோனிக்கு CSK தந்த ஸ்பெஷல் பரிசு – உற்சாகத்தில் தோனி

போட்டிக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அனைத்து வீரர்களுக்கும் டின்னர் விருந்து வைத்த நிர்வாகம், தோனிக்கு கோல்டர் கலரில் தொப்பி என்பதாக புதுமையான வடிவமைப்பில் பரிசு அளித்திருக்கிறது. அதைப் பார்த்ததும் தோனி செம ஹேப்பி ஆகி விட்டாராம்.

தோனிக்கு CSK தந்த ஸ்பெஷல் பரிசு – உற்சாகத்தில் தோனி

ஆல்ரவுண்டர் ஜடேஜாவுக்கு தங்க நிற வாள் பரிசளித்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம். இதேபோல மற்றவர்களுக்கும் பரிசுகள் அளித்து ஐபிஎல் போட்டியில் ஊக்கத்துடன் விளையாட உற்சாகம் அளித்திருக்கிறது.

தல தோனியின் தலைமையில் நாளைய போட்டியில் ரோஹித் ஷர்மாவின் தலைமையிலான மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. நாளை இறவு 7:30 மணிக்குப் போட்டித் தொடங்குகிறது.