ஐபிஎல்லுக்கு ஆயத்தமாகும் சிஎஸ்கே! மும்பையில் ஸ்பெஷல் கோச்சிங்

 

ஐபிஎல்லுக்கு ஆயத்தமாகும் சிஎஸ்கே! மும்பையில் ஸ்பெஷல் கோச்சிங்

ஐபிஎல் தொடரின் 14வது சீசன் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதியன்று சென்னையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் , நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் ஐந்து லீக் போட்டிகளை மும்பையில் விளையாட உள்ளது. அதனால் முதல் போட்டிக்கு தயாராகும் வகையில் சென்னை அணி இன்று மும்பை சென்றடைந்தது.

ஐபிஎல்லுக்கு ஆயத்தமாகும் சிஎஸ்கே! மும்பையில் ஸ்பெஷல் கோச்சிங்

இனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பையில் பயிற்சியை மேற்கொள்ளும் என அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்
” இந்த பயிற்சி முகாம் வீரர்களை சிறப்பான முறையில் தயார்படுத்திக் கொள்ள உதவும் என நம்புகிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் மும்பையில் வலைப்பயிற்சியை தொடங்கி, சிறப்பான முறையில் தொடரை தொடங்குவோம் என நம்புகிறோம். கடந்த சீசன் முடிந்த போது மார்ச் மாதத்தில் பயிற்சி முகாமில் பங்கேற்பேன் என தோனி கூறியிருந்தார். அந்தக் கூற்றை நிஜமாக்கும் வகையில் சொன்னதை போலவே சென்னைக்கு வந்து பயிற்சி மேற்கொண்டார். இந்த சீசனில் சென்னை அணி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தும் என நம்புகிறோம். அதற்கு ஏற்ற வகையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளோம்” என விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணியை மேலும் வலுப்படுத்தும் வகையில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் நட்சத்திர வீரர் ரெய்னா மும்பை வந்தடைந்துள்ளார். இவர் கோவிட் தனிமைப்படுத்தல் காலம் முடிந்தவுடன் பயிற்சியை தொடங்குகிறார்.