சிஎஸ்கே அணியில் கொரோனா உறுதியான 13 பேருக்கும் அறிகுறி இல்லை: பிசிசிஐ தகவல்!

 

சிஎஸ்கே அணியில் கொரோனா உறுதியான 13 பேருக்கும் அறிகுறி இல்லை: பிசிசிஐ தகவல்!

எல்லா வருடமும் ஐபிஎல் போட்டி என்றாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதே போல இந்த ஆண்டு கொரோனாவால் தள்ளிப்போடப்பட்ட ஐபிஎல் போட்டி , வரும் 19 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உட்பட அனைத்து அணிகளும் கடந்த 21 ஆம் தேதி ஐக்கிய அமீரகம் சென்றனர். அங்கு அணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் அதன் பிறகே போட்டிகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

சிஎஸ்கே அணியில் கொரோனா உறுதியான 13 பேருக்கும் அறிகுறி இல்லை: பிசிசிஐ தகவல்!

அதன் படியே சென்னையில் இருந்து குழுவாக சென்ற 52 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில், சென்னை அணியின் ஒரு வீரர் உட்பட 12 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து, மேலும் 1 வீரருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த ஆண்டு சென்னை நிச்சயம் சாம்பியன் பட்டம் வெல்லும் என எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

சிஎஸ்கே அணியில் கொரோனா உறுதியான 13 பேருக்கும் அறிகுறி இல்லை: பிசிசிஐ தகவல்!

இந்த நிலையில் கொரோனா பாதித்த 2 வீரர்கள் உட்பட 13 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. கொரோனா உறுதியான 13 பேருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என்றும் யுஏஇ சென்றதில் இருந்து ஆகஸ்ட் 20-28 ஆம் தேதி வரையில் 1,988 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.