“ஏண்டா என்னை இப்படி டார்ச்சர் பண்றே ” இன்ஸ்பெக்டரை சுட்டுவிட்டு தானும் சுட்டுக்கொண்ட எஸ். ஐ.

 

“ஏண்டா என்னை இப்படி டார்ச்சர் பண்றே ” இன்ஸ்பெக்டரை சுட்டுவிட்டு தானும் சுட்டுக்கொண்ட எஸ். ஐ.

ஓவர் டார்ச்சர் கொடுத்த மேலதிகாரியை தன்னுடைய துப்பாக்கியால் சுட்டு விட்டு ,அதே துப்பாக்கியால் தானும் சுட்டுக்கொண்டார் ஒரு CRPF சப் இன்ஸ்பெக்டர் .இதனால் ஊழியர்களை டார்ச்சர் செய்யும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்
டெல்லியின் லோதி எஸ்டேட்டில் சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கர்னைல் சிங் (55) தனது மேலதிகாரி இன்ஸ்பெக்டர் தஷ்ரத் சிங் (56) குடன் பாதுகாப்பது பணியில் வெள்ளிக்கிழமை இரவு ஈடுபட்டு வந்தார் .

“ஏண்டா என்னை இப்படி டார்ச்சர் பண்றே ” இன்ஸ்பெக்டரை சுட்டுவிட்டு தானும் சுட்டுக்கொண்ட எஸ். ஐ.அந்த எஸ்ஐ ஜம்மு-காஷ்மீரில் உள்ள உதம்பூரைச் சேர்ந்தவர், இன்ஸ்பெக்டர் ஹரியானாவின் ரோஹ்தக்கிலிருந்து வந்தவர்.அந்த சப்-இன்ஸ்பெக்டரை அவரின் மேலதிகாரி வெள்ளிக்கிழமை இரவு டெல்லியின் ஆடம்பரமான லோதி எஸ்டேட் பகுதியில் பணியிலிருக்கும்போது ரொம்ப டார்ச்சர் செய்துள்ளார் .அவரின்

“ஏண்டா என்னை இப்படி டார்ச்சர் பண்றே ” இன்ஸ்பெக்டரை சுட்டுவிட்டு தானும் சுட்டுக்கொண்ட எஸ். ஐ.

பணியைப்பற்றி குறை கூறிக்கொண்டே இருந்துள்ளார் .இப்போது மட்டுமல்ல,இதற்கு முன்பும் பலமுறை அந்த எஸ் ஐ மீது அந்த இன்ஸ்பெக்டர் குற்றம் கூறிக்கொண்டும் டார்ச்சர் செய்து கொண்டுமிருந்துள்ளார் .இதனால் பொறுக்கமுடியாத அந்த எஸ் ஐ வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் தன்னுடைய மேலதிகாரியான இன்ஸ்பெக்டரை தன்னுடைய துப்ப்பாக்கியால் சுட்டு விட்டு, அதே துப்பாக்கியால் தானும் சுட்டுக்கொண்டுள்ளார் . .பிறகு துப்பாக்கிச் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து துணை ராணுவப் படையினரும் உள்ளூர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .