கோயம்பேட்டில் குவிந்த மக்கள் : போதிய பேருந்து வசதி இல்லாததால் நள்ளிரவில் போராட்டம்!

 

கோயம்பேட்டில் குவிந்த மக்கள் : போதிய பேருந்து வசதி இல்லாததால் நள்ளிரவில் போராட்டம்!

தொடர் விடுமுறை காரணமாக கோயம்பேட்டில் நேற்று இரவு மக்கள் கூட்டம் அலைமோதியது பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்பேட்டில் குவிந்த மக்கள் : போதிய பேருந்து வசதி இல்லாததால் நள்ளிரவில் போராட்டம்!

வார இறுதி விடுமுறை மற்றும் குடியரசு தினம் ஆகியவை வருவதால் தொடர்ச்சியான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் நேற்று இரவு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிய தொடங்கினர். ஆனால் வார இறுதி நாட்களுக்கான அட்டவணைப்படி நேற்று பேருந்து இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

கோயம்பேட்டில் குவிந்த மக்கள் : போதிய பேருந்து வசதி இல்லாததால் நள்ளிரவில் போராட்டம்!

பேருந்து நிலவரம் குறித்து எந்த பதிலும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இதனால் நெடு நேரம் காத்திருந்த மக்கள் அங்குமிங்கும் சுற்றி திரிந்த வண்ணம் இருந்தனர். கொரோனா காலகட்டத்தில் மக்கள் கூட்டம் ஒரே இடத்தில் குவிந்ததால் தொற்று ஏற்படும் அபாயமும் இருந்தது. பின்னர் பொதுமக்கள் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்து பேருந்துகளையும் வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நள்ளிரவில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் விரைந்து வந்து போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படும் என்று உறுதியளித்த பின்னரே அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்