ஒரு கோடியைக் கடந்தது – உலகளவில் சிசிக்சை எடுப்பவர்கள் எண்ணிக்கை #Corona

 

ஒரு கோடியைக் கடந்தது – உலகளவில் சிசிக்சை எடுப்பவர்கள் எண்ணிக்கை #Corona

நவம்பர் 2-ம் தேதி காலை நேர நிலவரப்படி நிலவரப்படி, உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 4 கோடியே 68 லட்சத்து 52 ஆயிரத்து 887 பேர்.கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 12 லட்சத்து 05 ஆயிரத்து 675 பேர்.

ஒரு கோடியைக் கடந்தது – உலகளவில் சிசிக்சை எடுப்பவர்கள் எண்ணிக்கை #Corona

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 37 லட்சத்து 72 ஆயிரத்து 592 நபர்கள்.

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,18,74,620 பேர். சிகிச்சை எடுப்போரின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது அதிர்ச்சியாக இருக்கிறது. இவர்களில் 99 சதவிதத்தினர் லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது அமெரிக்காவில் 94,74,845 பேரும், இந்தியாவில் 82,29,322 பேரும், பிரேசில் நாட்டில் 55,45,705 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

ஒரு கோடியைக் கடந்தது – உலகளவில் சிசிக்சை எடுப்பவர்கள் எண்ணிக்கை #Corona

இது இன்றைய நிலை. நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ள புதிய நோயாளிகள் பட்டியலில், அமெரிக்காவில் 71,321 பேரும், பிரேசிலில் 10,100 பேரும், பிரான்சில் 46,290 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். இந்தியாவில் 46,441 பேராக அதிகரித்துள்ளனர். அமெரிக்காவில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்ற நாடுகளை விடவும் அதிகளவில் உள்ளது.

நேற்று இறந்தோர் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம். அமெரிக்காவில் 399, பிரேசிலில் 202, இந்தியாவில் 493 பேரும் நேற்று இறந்திருக்கிறார்கள். இந்தியாவில் இதுவரை 1,22,642 பேர் கொரோனாவால் பலியாகியிருக்கிறார்கள்