சிறுமியை கவ்வி இழுத்துக் கொன்ற முதலை; பூப்பறிக்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

 

சிறுமியை கவ்வி இழுத்துக் கொன்ற முதலை; பூப்பறிக்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

ஹரித்வார் அருகே பூப்பறிக்க சென்ற சிறுமியை முதலை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வார் மாவட்டத்தில் இருக்கும் பண்டித்பூரை சேர்ந்த சிறுமி ராதிகா(8). இச்சிறுமி தனது வீட்டிலிருந்து 1 1/2 கி.மீ தொலைவில் இருக்கும் இடத்தில் சகோதரியுடன் பூப்பறிக்க சென்றுள்ளார். அந்த இடம் முழுவதும் சதுப்புநில காடாக இருந்த நிலையில், ஆகாயத் தாமரைகள் நீர்நிலையை படர்ந்து மூடிக்கிடந்துள்ளது. அதனால் அதில் முதலைகள் இருப்பதை சிறுமிகள் அறியவில்லையாம்.

சிறுமியை கவ்வி இழுத்துக் கொன்ற முதலை; பூப்பறிக்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

ராதிகா நீர் நிலைக்கு அருகே சென்ற போது, தண்ணீருக்குள் இருந்து வெளியே வந்த முதலை ராதிகாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மற்றொரு சிறுமி, விரைந்து சென்று தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்துக்கு வந்த பெற்றோர்கள் ஹரித்வாரின் வனத் துறை அதிகாரிகளுக்கு கொடுத்த தகவலின் பேரில், வனத்துறையினர் சிறுமியை தேடியுள்ளனர். ஆனால் அங்கு முழுவதுமாக சடலமாக இருந்ததால் தேடும் பணியில் சிரமம் நீடித்திருக்கிறது. இருப்பினும் சிறுமியின் சடலத்தை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.

சிறுமியை உள்ளே இழுத்துச் சென்ற முதலை சகதியாக இருந்ததால் சாப்பிடவில்லை என தெரிவித்த அதிகாரிகள், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்டில் இனப்பெருக்கம் அடைந்து தற்போது 451 முதலைகள் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.