காவல் நிலையத்தில் வழுக்கி விழும் குற்றவாளிகள்..சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க நோட்டீஸ்!

 

காவல் நிலையத்தில் வழுக்கி விழும் குற்றவாளிகள்..சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க நோட்டீஸ்!

சென்னை காவல்நிலைய குளியலறையில் குற்றவாளிகள் தொடர்ந்து வழுக்கி விழுந்த சம்பவம் நடந்து வந்துள்ளது. இதனால் குற்றவாளிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் ஜார்ஜ் மில்லருக்கு எதிராக தேவேந்திரன் என்பவரை புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் தேவேந்திரனை விசாரிக்க காவல் நிலையத்துக்கு அழைத்து சென்ற போது அவர் வழுக்கி விழுந்து விட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

காவல் நிலையத்தில் வழுக்கி விழும் குற்றவாளிகள்..சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க நோட்டீஸ்!

அதனால் சென்னை மாநகர காவல் நிலையங்களில் உள்ள குளியலறையில் வழுக்கி விழுந்தது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இது போன்ற சம்பவங்கள் முன்னதாக நடந்துள்ளதா என்றும் குளியலறையை பராமரிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் அதனைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் பதில் அளிக்குமாறு குறிப்பிட்டுள்ளது.