“முக்கியமான நேரத்துல தூக்கிட்டு போய்ட்டாங்களே” -காதலியோடு உல்லாசத்திலிருந்த போது சிக்கிய கொலை குற்றவாளி .

 

“முக்கியமான நேரத்துல தூக்கிட்டு போய்ட்டாங்களே” -காதலியோடு உல்லாசத்திலிருந்த போது சிக்கிய கொலை குற்றவாளி .


காதலியோடு உல்லாசமாக இருந்த ஒரு கொலை குற்றவாளியை, போலீசார் சுற்றி வளைத்து பிடித்த சம்பவம் டெல்லியில் பரபரப்பினை உண்டாக்கியுள்ளது

டெல்லியில் ஹஷிம் என்ற ஒரு குற்றவாளி மீது பல கொலை ,கொள்ளை போன்ற வழக்குகள் உள்ளன .அவரை போலீசார் பல மாதங்களாக வலை வீசி தேடி வருகிறார்கள். மேலும் அவரின் தலைக்கு ஆறு லட்ச ரூபாய் விலை வைத்திருந்தார்கள் .இந்நிலையில் பல மாதங்களாக தலை மறைவு வாழ்க்கை நடத்தி வந்த ஹஷிமுக்கு ஒரு கள்ள காதலி இருந்தார் .அதனால் தன்னுடைய காதலியோடு கடந்த வாரம் உல்லாசமாக இருக்க திட்டமிட்டார் .அதற்கான ஏற்பாடுகளை அவரின் கூட்டாளிகள் மூலம் செய்யப்பட்டது .
அதனால் ஹசிம் மாறுவேடத்தில் ஷாஹத்ராவில் உள்ள சுபாஷ் பூங்காவில் உள்ள
அந்த காதலியின் வீட்டிற்க்கு புதன்கிழமை அதிகாலை வந்தார் .இந்த விஷயம் போலீசின் உளவுப்பிரிவுக்கு சிலர் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது .அதனால் அவரை பிடிக்க திட்டமிட்டார்கள் .அதிகாலை அவரின் காதலி வீட்டிற்குள் நுழைந்த ஹஷிம் அவரின் காதலியோடு உல்லாசமாக இருக்க முற்பட்ட போது ,போலீசார் சுற்றி வளைத்தார்கள் .
காதலி வீட்டின் வெளியே ஏதோ சத்தம் கேட்பதை பார்க்க ஹாசிம் வெளியே வந்தபோது அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தார்கள் .அவர்களிடமிருந்து தப்பிக்க அவரின் பைக்கை நோக்கி ஹசிம் ஓடினார் .அப்போது போலீசார் ஒரு துப்பாக்கியால் அவரின் காலில் சுட்டு பிடித்தார்கள் .

“முக்கியமான நேரத்துல தூக்கிட்டு போய்ட்டாங்களே” -காதலியோடு உல்லாசத்திலிருந்த போது சிக்கிய கொலை குற்றவாளி .