சீத்தாராம் யெச்சூரி மீது கிரிமினல் வழக்கு! டெல்லி போலீசை கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
Sep 16, 2020, 13:38 IST1600243700000
சிபிஎம் தேசிய தலைவர் சீத்தாராம் யெச்சூரி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ள டெல்லி காவல்துறையை கண்டித்து தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சீதாராம் யெச்சூரி மீது டெல்லி காவல்துறை டெல்லியில் நடந்த கலவரங்களை தூண்டியதாக கிரிமினல் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதை கண்டித்து சீதாராம் எச்சூரி மற்றும் அறிவுஜீவிகள் மீது போடப்பட்டுள்ள பொய்யான கிரிமினல் வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.