"எனக்கு ஏற்கனவே கல்யாணமாகி குழந்தை இருக்கு "-உண்மை சொன்ன புது மனைவி -அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

 
marriage

முதல் திருமணத்தை மறைத்து காதலனை 2-வதாக திருமணம் செய்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

suicide
தமிழகத்தின் சத்தியமங்கலம் வடக்குபேட்டை பகுதியை  சேர்ந்த 21 வயதான சிவமுனியப்பன் ஒரு தனியார் நிறுவன  தொழிலாளி. இவர் தற்போது பெற்றோருடன் நம்பியூர் பெரியார்நகரில் வசித்து வருகிறார்.
சிவமுனியப்பனுக்கும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ராஜகவுண்டன்பாளையத்தை சேர்ந்த 20வயதான சவுமியா என்பவரும்  ஒருவரையொருவர் காதலித்து வந்தனர் .ஆனால் அந்த சௌமியா ஏற்கனவே ஒருவரை கல்யாணம் செய்து ஒரு குழந்தையும் பெற்றுவிட்டு தனியாக வாழந்து வந்தார் .இதை அந்த பெண் மறைத்து விட்டு அந்த காதலனை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் 

சில நாட்கள் சந்தோஷமாக போன அவர்கள் வாழ்வில் திடீரென்று புயல் வீசியது .அந்த சௌமியா தனது முதல் திருமணத்தையும் குழந்தையையும்  மறைத்து கணவனை ஏமாற்றி கல்யாணம் செய்து கொண்டதால் அவர் மனசாட்சி உறுத்தி சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து விட்டார் .இதையறிந்த அந்த கணவன் அந்த மனைவியை ஹாஸ்ப்பிட்டலுக்கு தூக்கி சென்றார் .ஆனால் அங்கு  சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் .பின்னர் இது பற்றி போலீசார் வழக்கு பதிந்து  விசாரித்து வருகின்றனர்