மருமகனோடு கள்ள உறவாடிய மாமியார் -காண்டான மனைவி-கடைசியில் என்னாச்சி தெரியுமா ?
பழைய பகை காரணமாக மருமகனை கொலை செய்த 72 வயது மாமியாரை போலீஸ் கைது செய்தது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வடாலாவின் பக்தி பூங்காவிற்கு அருகிலுள்ள MHADA காலனியில் 56 வயதான விமல் கண்ணா வசித்து வந்தார் .அடுத்து விரார் கிழக்கில் 72 வயதான சாந்தி சுரேஷ் பால், என்ற பெண் வசித்து வந்தார் .இருவரும் 35 ஆண்டுகளுக்கு முன்பு கள்ள காதலர்களாக இருந்தனர் .அப்போது அவர்களின் கள்ள காதலுக்கு வந்த சில பிரச்சினைகள் காரணமாக அந்த கண்ணாவுக்கு அந்த பெண் சுரேஷ் பால் தன்னுடைய மகளை திருமணம் செய்து கொடுத்து மருமகனாக்கிக்கொண்டார் .
அதன் பிறகு அந்த கண்ணாவின் மனைவிக்கு இந்த கள்ள விவகாரம் தெரிந்து விட்டதால் அவர் அந்த கண்ணாவை விட்டு பிரிந்து தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார் .அதன் பிறகு சமீபத்தில் அந்த கண்ணாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது .அதனால் அவரை கவனித்து கொள்ள அந்த மாமியாரும் ,மனைவியும் அவரின் வீட்டுக்கு வந்தனர் .அப்போது அந்த மனைவி வெளியே சென்றிருந்த போது அந்த மாமியாருக்கும் மருமகனுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது .அந்த சமயத்தில் அந்த மாமியார் அங்கிருந்த ஒரு சுத்தியலை எடுத்து அந்த மருமகனும் ,முன்னாள் காதலனுமான கண்ணாவை அடித்து கொலை செய்து விட்டார் .பின்னர் இந்த கொலை பற்றி தகவலறிந்த போலீசார் அந்த 72 வயதான பெண் சுரேஷ் பால் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.