போலீசை துரத்திய பெண் பேய்.... பூஜை அறையை விட்டு வெளியே வந்ததும் மரணம்

 
ப்

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் கடலூர் ஆயுதப்படையில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்துள்ளார்.  இவருக்கு திருமணமாகி விஷ்ணுபிரியா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.   பிரபாகரன் தனது குடும்பத்துடன் கடலூரில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.   மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மனைவியும் அவரது குழந்தைகளும் சென்றிருக்கிறார்கள்.

 திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது பிரபாகரன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.  அக்கம்பக்கத்தினர் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரபாகரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

பெ

 இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.   பிரபாகரன் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லை என்று பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிய வந்திருக்கிறது.  மேலும் காவலர் குடியிருப்பில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு இறந்துபோன பெண் பேயாக வந்து தன்னை மிரட்டி வருவதாக கூறி வந்திருக்கிறார்.  தனக்கு பேய் பிடித்திருக்கலாம் என்று நினைத்தவர்,  குறிசொல்பவர்களை பார்த்து மந்திரித்து வந்துள்ளார். 

 இதனால் 15 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள்ளேயே பூஜை அறையிலேயே இருந்திருக்கிறார்.    விடுமுறை முடிந்ததும் பணிக்குத் திரும்பிய பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் .   

பிரபாகரன் வேலையில் இருந்தபோது சிரித்த முகத்துடன் இருப்பதோடு அல்லாமல் உயரதிகாரிகளின் நன்மதிப்பையும் பெற்றிருந்திருக்கிறார்.  அதனால் அவரது இறப்பிற்கு பணிச்சுமை காரணமல்ல என்பது தெரியவந்திருக்கிறது.   பேய் பயம் காரணம் தான் அவரது தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.   பேய் பயத்தினால் போலீஸ் தற்கொலை செய்து கொண்ட போலீசார் சம்பவம் கடலூர், கள்ளக்குறிச்சி பகுதிகளில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.