அடிக்கடி சமாதானம் செய்து வைத்த போலீசுடன் உறவு-கணவனை வெட்டி வீசிவிட்டு மனைவி எஸ்கேப்

 
tஹ்

 கணவனுடன் அடிக்கடி தகராறு ஏற்படும் போதெல்லாம் போலீசுக்கு போன் போட,  தம்பதிகளை சமாதானம் செய்து வைக்க வந்து போன அந்த போலீசுக்கும் பெண்ணுக்கும் இடையே  உறவு ஏற்பட்டிருக்கிறது.  இது தெரிந்த கணவன் தற்கொலை முயற்சிக்கும் சென்றிருக்கிறார்.  இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டு இருக்கிறார்.  மனைவியோ தலைமறைவாக இருக்கிறார்.

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி அடுத்த தேவகானபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத்.   கார் டிரைவரான இவருக்கு அனிதா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.  மஞ்சுநாத்துக்கும் அனிதாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.   அந்த சமயங்களில் அனிதா உடனே போலீசுக்கு போன் செய்து வந்திருக்கிறார்.

ப்

 அப்போது வீட்டிற்கு வந்து  அடிக்கடி சமாதனம் செய்து வைத்து சென்றிருக்கிறார் ஒரு போலீஸ்காரர்.  அடிக்கடி இப்படி வந்து சமாதானம் பேசி விட்டுப் போன நிலையில் அந்த போலீஸ்காரருக்கும் மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி இருக்கிறார் மஞ்சுநாத்.   இதனால் கடந்த ஆண்டு ஜூலை 21ஆம் தேதியன்று தளி காவல் நிலையம் முன்பாக லுங்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்திருக்கிறார் மஞ்சுநாத்.

 பின்னர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் அவர் உயிர் பிழைத்திருக்கிறார்.   இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்.

 இந்த நிலையில் சான போகனபள்ளி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று மஞ்சுநாத் முகத்தில் வெட்டு காயத்துடன் சடலமாக கிடந்த இருக்கிறார் .   தளி போலீசார் நடத்திய விசாரணையில் வேறு பகுதியில் கொலை செய்யப்பட்டு இங்கு வந்து சடலத்தை வீசி விட்டுச் சென்றிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர் .

இந்த நிலையில் மஞ்சுநாத் மனைவி அனிதா தலைமறைவாக இருப்பதால் அவருக்கும் கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.