மதுவில் சயனைடு கலந்து நண்பர்கள் கொலை- போலி மது வழக்கில் திடீர் திருப்பம்

 
ச

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மூன்று தொழிலாளர்கள் விடிய விடிய மது குடித்ததால் உயிரிழந்துவிட்டனர் என்ற வழக்கு பதிவாகி இருந்த நிலையில் , இந்த மூன்று பேரும்  சயனைடு கலந்து கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரியவந்திருக்கிறது.   தீபாவளி தினத்தன்று மதுக்கடைகள் இல்லாததால் கள்ளச்சந்தையில் மது பானம் வாங்கி அருந்தியதால் தான் அந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்றும் சொல்லப்பட்ட நிலையில்,  அந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.

 கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் தீபாவளி கொண்டாடுவதற்காக பார்த்திபன், முருகானந்தம், சக்திவேல் ஆகிய மூன்று தொழிலாளர்களும் மது அருந்தியிருக்கிறார்கள்.

ட்ட்

தீபாவளி கொண்டாட்டத்தில் இந்த மூன்று பேரும் மது வாங்கி இரவு இரவு நீண்ட நேரம் வரைக்கும் அருந்தியிருக்கிறார்கள்.   அதன் பின்னர் தூங்கிவிட்டார்கள்.  அதிகாலையில் எழுந்ததும் 6 மணிக்கே கள்ளச்சந்தையில் மது வாங்கி மீண்டும் மது அருந்தி  இருக்கிறார்கள்.    இதன் பின்னர் சக்திவேல், முருகானந்தம் இருவரும் மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்ட பொதுமக்கள் அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.   இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியிருக்கிறார்கள்.   இவர்களுடன் மது அருந்திய பார்த்திபனும் அவரது வீட்டில் உயிர் இழந்து கிடந்ததை அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர்.

 விடிய விடிய மது அருந்தியதால் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி பரவியது.  மேலும் கள்ளச்சந்தையில் மது வாங்கி அருந்தியதால் அந்த மதுபானத்தினால் தான் இறந்தார்கள் என்றும் செய்தி பரவியது.

 இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரித்து வந்த நிலையில் ராஜசேகர் என்பவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.   இறந்தவர்களின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மதுவில் சயனைடு கலந்து இருந்தது தெரியவந்தது.   பிரேத பரிசோதனை முடிவுகள் இப்படி வந்ததால் இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது முன்விரோதம் காரணமாக இந்த கொலைகள் நடந்து இருக்கின்றன என்பதை புரிந்து கொண்டனர்.

 இதையடுத்து நடந்த விசாரணையில் தான் ராஜசேகர் என்ற 63 வயது ஆண் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவர்தான் மூன்று பேரையும் மதுவில் சயனைடு கலந்து  கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார்.