மனைவி ஊருக்கு சென்றுவிட்டதால் பெற்ற தாயை கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்
பெற்ற தாயை கட்டிப்போட்டு இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்ததில் கடுமையாக பாதிக்கப்பட்ட அந்த தாய் மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்றபின்னர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் அரங்கேறியிருக்கிறது இந்த அவலம்.
தட்சிண கன்னடா மாவட்டத்தில் புத்தூர் வட்டத்தில் 35 வயது இளைஞர் திருமணமானவர். மனைவி தாய் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். தாயும் மகனும் வீட்டில் இருந்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு 58 வயது மதிக்கத்தக்க அந்த தாய் தூங்க சென்றிருக்கிறார். மகனும் தூங்கியிருக்கிறார். நள்ளிரவு 3 மணி அளவில் அந்த இளைஞர் தனது தாயின் அறைக்கு சென்றிருக்கிறார். அங்கே தூங்கிக் கொண்டிருந்த தாயின் வாயில் துணியை வைத்து அடைத்து, கைகளை கட்டிப்போட்டு பாலியல் செய்திருக்கிறார்.
இதிலிருந்து தப்பிக்க நினைத்தும் அந்த பெண்மணியால் முடியவில்லை. வன்கொடுமை செய்த பின் இதைப் பற்றி யாரிடமாவது வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். இதில் அதிர்ச்சிக்குள்ளாகி உடல்நலம் பாதிக்கப்பட்டு கிடந்த அந்த தாயை காலையிலும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார் அந்த இளைஞர்.
இதனால் கடுமையாக பாதிப்புக்கு உள்ளான அந்த தாய், தானாகவே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றிருக்கிறார். மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் போலீஸார் சென்று தன்னிடம் கொடூரமாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மகன் மீது புகார் அளித்திருக்கிறார். இதையடுத்து போலீசார் அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து உள்ளனர்.
பெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்ததோடு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ளும் அளவுக்கு கொடூரமாக நடந்துகொண்ட மகனின் வெறிச்செயல் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.