"முன்னாள் மனைவின்னு நெனச்சி பின்னால் வந்து .".கொரானா மாஸ்க் போட்டதால் நடந்த கொடுமை

 
rape


டைவர்ஸ் ஆன மனைவின்னு நெனச்சி வேறு ஒரு பெண்ணை வெட்டிய நபரை போலீஸ் கைது செய்தது 

gang rape
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் நன்மண்டா பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில்  ஸ்வேதா என்ற பெண் வேலை செய்து வந்துள்ளார். அந்த பெண் பிஜூ என்பவரை  திருமணம் செய்து கொண்டு ,பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு டைவர்ஸ் வாங்கிவிட்டார் .பிஜுவுக்கு ஸ்வேதாவுடன் விவாகரத்து ஆனதையடுத்து பிஜூ இரண்டாவது திருமணம் செய்துள்ளார். ஆனாலும் அந்த பெண் ஸ்வேதாவுக்கும் அவரின் முன்னால் கணவர் பிஜுவுக்குமிடையே அடிக்கடி மோதல் இருந்து வந்துள்ளது .இதனால் பிஜு அவரின் முன்னாள் மனைவி ஸ்வேதாவை கொல்ல முடிவு செய்தார் .அதனால் கடந்த வாரம் ஒரு கத்தியோடு அவர் வேலை பார்க்கும் வங்கிக்குள் வந்தார் .அப்போது ஸ்வேதா லீவ் எடுத்திருந்தார் .
அதனால் அவர் வழக்கமாக அமர்ந்து வேலை செய்யும் இருக்கையில் சக ஊழியரான ஸ்ரீஷ்மா அமர்ந்து வேலை செய்துள்ளார்.இந்நிலையில், அந்த வங்கிக்கு  வந்த பிஜூ தனது முன்னாள் மனைவியான ஸ்வேதா தான் அவரது இருக்கையில் அமர்ந்திருப்பதாக தவறுதலாக நினைத்து தான் மறைத்து கொண்டு வந்த கத்தியை கொண்டு வெட்டியுள்ளார். இந்த தாக்குதலில் அந்த பெண் ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார் 
இதனை தொடர்ந்து அவரை மீட்ட சக வங்கி ஊழியர்கள் ஸ்ரீஷ்மாவை மருத்துவமனையில் அனுமதித்தனர். பிஜூவின் கத்தி குத்து தாக்குதலில் படுகாயமடைந்த ஸ்ரீஷ்மாவுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இப்போது போலீசார் அந்த பிஜூவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.