வேறு எந்தப்பெண்ணையும் இனி அனுபவிக்க கூடாது/முடியாது - ஏமாற்றிய காதலனின் ஆணுறுப்பை துண்டித்த காதலி
தன்னைக் காதலித்து தன்னுடன் உல்லாசம் அனுபவித்து விட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் இனி வேறு எந்த பெண்ணையும் அனுபவிக்க கூடாது. அனுபவிக்க முடியாது என்ற திட்டமிட்டு காதலனின் ஆணுறுப்பை துண்டித்து இருக்கிறார் காதலி. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
ஜெய்ப்பூரை சேர்ந்த அந்த இருபத்தி எட்டு வயது இளைஞர் ஒரு யோகா ஆசிரியர். இதே துறையில் இருந்த 35 வயது யோகா டீச்சருடன் வேலைக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. திருமணமாகாத இளைஞர் திருமணமான அந்த பெண்ணுடன் அதிகம் நெருங்கி பழகி வந்திருக்கிறார். அப்பெண் கணவரை பிரிந்து குழந்தையுடன் வசித்து வந்ததால் இளைஞருக்கு ரொம்பவே வசதியாக போய் இருந்திருக்கிறது. அப்பெண்ணுடன் நெருங்கிப் பழகி வர, கணவன் இல்லாததால் அப்பெண்ணும் இந்த இளைஞருடன் நெருங்கிப்பழகி வந்திருக்கிறார் . இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இளைஞரிடம் தன்னை திருமணம் செய்துகொள்ள கேட்டு வந்திருக்கிறார். ஆனால் இளைஞர் அதற்கு மறுப்பு தெரிவித்து வீட்டில் பார்க்கும் பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லி இருக்கிறார். இதனால் தன்னை அனுபவித்து விட்டு வேறு ஒரு பெண்ணை அனுபவிக்க நினைக்கிறானே. அவன் வேறு ஒரு பெண்ணை அனுபவிக்க முடியாத வகையில் செய்ய வேண்டும் என்று அந்த யோகா டீச்சர் திட்டமிட்டிருக்கிறார்.
இதையடுத்து கடந்த 16 ஆம் தேதி அன்று அந்த இளைஞருக்கு போன் செய்து காய்கறிகள் வாங்கி வரச் சொல்லியிருக்கிறார். காய்கறிகள் வாங்கி வந்ததும் இரவு உணவு சாப்பிட்டு விட்டுச் செல்லலாம் என்று சொல்லியிருக்கிறார். வீட்டில் சமைத்து சாப்பிட்ட பின்னர் இளைஞர் தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றிருக்கிறார். அப்போது அந்த யோகா டீச்சர், தனியாகத்தானே வீடு எடுத்து தங்கி இருக்கிறாய். நானும் வரட்டுமா என்று கேட்டு இருக்கிறார்.
அந்த இளைஞரும் அதற்கு சரி என்று சொல்லியிருக்கிறார். முன்னதாக இளைஞருக்கு கொடுத்த உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இருக்கிறார். இளைஞரின் வீட்டிற்குச் சென்றது தூக்கம் வருகிறது என்று சொல்லிவிட்டு உடனே தூங்கி இருக்கிறார்.
பாதி இரவில் தூக்கக்கலக்கத்தில் எழுந்தவர் இடுப்புக்கு கீழே வலி இருப்பதை உணர்ந்து இருக்கிறார். படுக்கை முழுவதும் ரத்தமாக இருந்திருக்கிறது. அதிர்ந்து போன அவர் எழுந்து எழுந்து உட்கார முயற்சித்திருக்கிறார் . அப்போது இடுப்புக்கு கீழே வலி அதிகமாக இருக்கவும், கவனித்து பார்த்து அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். தனது ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது .
இதை அடுத்து தன்னுடன் வந்து தனது அருகில் படுத்திருந்த யோகா டீச்சரை சத்தம் போட்டு அழைத்து பார்த்து இருக்கிறார். அவர் வீட்டில் இல்லை. இதன் பின்னர், அருகில் இருந்த செல்போனை எடுத்து அவருக்கு போன் செய்திருக்கிறார். அவர் முதலில் போனை எடுத்தும் ஷாரி என்று சொல்லிவிட்டு வைத்திருக்கிறார். அப்போதுதான் தான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதற்காக இப்படி ஒரு காரியத்தைச் செய்துவிட்டார் என்பதை தெரிந்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
பின்னர் அந்தப் பெண்ணே விரைந்து வந்து அந்த இளைஞரை மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார். கடந்த வியாழக்கிழமை அந்த நபர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி இருக்கிறார். அதற்கு முன்னரே அந்த யோகா டீச்சர் தலைமறைவாகிவிட்டார்.
போலீசில் சென்று அந்த இளைஞர் புகார் அளித்திருக்கிறார். அந்த யோகா டீச்சரை தேடி வருகின்றார்கள். இளைஞருக்கும் அந்த யோகா டீச்சர் இளைஞருக்கும் நெருக்கம் இருந்திருக்கிறது இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார்கள். திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் தான் அந்தப் பெண் இப்படி ஒரு அதிர்ச்சி முடிவு எடுத்திருக்கிறார். உணவில் மயக்க மருந்து கொடுத்து தூங்க வைத்துவிட்டு திட்டமிட்டபடியே ஆணுறுப்பு அறுத்து எடுத்திருக்கிறார் என்று போலீசார் வழக்கு வழக்கில் பதிவு செய்து உள்ளனர்.