சென்னை அதிர்ச்சி:கணவரை உயிருடன் புதைத்துவிட்டு அதற்கு மனைவி சொன்ன காரணம்

 
ஜே

 கணவரை உயிருடன் புதைத்து கொலை செய்த மனைவியை பிடித்து போலீசார் விசாரித்தபோது,  கணவனின் விருப்பத்தை நிறைவேற்றி இருக்கிறேன்.  அவர் ஜீவசமாதி ஆக வேண்டும் என்று சொன்னா.  ர் அதனால் அவரின்  விருப்பத்தையே நிறைவேற்றி வைத்திருக்கிறேன் என்று சொல்லி அதிர வைத்திருக்கிறார். சென்னையில் நடந்து இருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம் .

சென்னை பெரும்பாக்கம் கலைஞர் நகரில் வசித்து வந்தவர் நாகராஜ்.   60 வயதான நாகராஜுக்கு 45 வயதில் லட்சுமி என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் இருந்துள்ளனர்.   மகன் துபாயில் வேலை பார்த்து வருகிறார்.  25 வயதான மகள் தமிழரசி சோழிங்கநல்லூரில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

ப்

குறி சொல்லி சாமி ஆடுவதுதன் நாகராஜின் தொழிலாக இருந்திருக்கிறது.   இந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதியன்று நாகராஜுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது.   அப்போது தன் மனைவியிடம் தான் சாகப் போவதாகவும் தன்னை வீட்டின் கொல்லை புறத்தில் உள்ள குழியில் புதைத்து ஜீவ சமாதி ஆக்கி விடுமாறும்,  இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று  கேட்டு சத்தியம் வாங்கிக்கொண்டதாகவும் சொல்கிறார்  அவரது மனைவி லட்சுமி.  இதை எடுத்து மனைவி லட்சுமி , கணவன் நாகராஜை குழிக்குள் பிடித்து உட்கார வைத்து மண்ணை அள்ளி மூடி விட்டதாக சொல்கிறார்.  

பெ

வீட்டில் தந்தையை காணாததால் மகள் தமிழரசி எங்கே என்று தேடிய போது,  முதலில் சொல்லத் தயங்கிய தாய் , பின்னர் விவரத்தைச் சொல்ல,  ஜீவசமாதி அடைந்தரா? தந்தையா? என்று அதிர்ந்து போன தமிழரசி,  பெரும்பாக்கம் போலீசில் புகார் அளிக்க,  அவர்கள் வந்து மகள் அளித்த புகாரின் பேரில் தாய் லட்சுமியிடம்  விசாரித்தபோது கணவரின் விருப்பத்தைத்தான்  நிறைவேற்றி இருக்கிறேன்.  அவர் தான் ஜீவசமாதி அடைய வேண்டும் என்று சொன்னார் என சொல்ல போலீசாரும் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.   ஆனாலும் சந்தேகத்தின் பேரில் போலீசார் லட்சுமியிடம் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 மேலும் ,  வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் நாகராஜ் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய இருக்கிறார்கள்.

பிரேத பரிசோதனையின்  முடிவுகள் வந்த பின்னரே  மேற்கொண்டு உண்மைகள் தெரியவரும் என்கிறார்கள் போலீசார்.