இசை ஆராய்ச்சியில் ஈடுபட்ட வாலிபர் கொடைக்கானலில் மர்ம மரணம்

 
ம்m

கொடைக்கானலில் தங்கி இருந்து இசை ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த தென்காசியை சேர்ந்த வாலிபர் சூர்யா அடித்து படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் சூர்யாவின் படுகொலையில் இளம்பெண் உட்பட மூன்று பேரிடம் கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 தென்காசியை சேர்ந்த சூர்யா(28) கொடைக்கானலில் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்து வந்துள்ளார்.   இசை ஆராய்ச்சிக்காக அவர் கொடைக்கானலில் தங்கி இருந்திருக்கிறார்.   இதனால் தனது அறையை விட்டு அதிகாலையிலேயே வெளியே செல்லும் சூர்யா  மறுநாள் தான் அறைக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.

ப்

 இந்த நிலையில் அவரது அறை கதவு பூட்டி கிடக்கும் நிலையில்,  அருகில்  ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்து இருக்கிறார் .  தகவல் கிடைத்ததன் பேரில் கொடைக்கானல் போலீசார் சூர்யாவின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு அவரை அடித்து கொலை செய்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இளம்பெண் ஒருவருடன் சூர்யாவுக்கு பழக்கம் இருப்பது தெரியவந்துள்ளதால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  சூர்யாவின் அறைக்கு அடிக்கடி வந்து சென்ற நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் ,  சூர்யாவின் செல்போனில் ஏதாவது ஆதாரங்கள் உள்ளதா என்பது குறித்து போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

 மேலும்,  சூர்யாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து அவர்களை கொடைக்கானலுக்கு வரவைத்துள்ளனர் போலீசார்.