5வயது மகளை 4வது மாடியில் இருந்து வீசிய தாய்! பகீர் சிசிடிவி காட்சிகள்

 
dr

பயத்தில் தாயின் கழுத்தை இறுக பிடித்துக்கொண்டிருந்த போதும் அந்த கொடூர தாய் கைகளை தளர்த்திவிட்டு ஐந்து வயது மகளை நாலாவது மாடியில் இருந்து பிடித்து தள்ளி விட்டு கொலை செய்திருக்கிறார் .  குழந்தை மனவளர்ச்சி குன்றிய நிலையில் இருந்ததால்  அப்படி செய்திருக்கிறார் அந்த பெண் டாக்டர்.

 கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அந்த குழந்தையை ரயில் நிலையத்தில் அனாதையாக விட்டுச் சென்று இருக்கிறார்.  பின்னர் தந்தை தேடிப் பிடித்து குழந்தையை வீட்டுக்கு கொண்டு வந்திருக்கிறார்.   இந்த நிலையில் அந்த பல் மருத்துவர் சுஷ்மா மீண்டும் குழந்தையை  கொலை செய்ய வேண்டும் என்று நாலாவது மாடியில் இருந்து வீசி கொன்று இருக்கிறார்.

m

 பெங்களூரில் சிலிகான் நகரில் சம்பங்க ராம் நகர் பகுதியில் உள்ள அத்விக் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பல் டாக்டர் சுஷ்மா.  அவரது கணவர் டி சி எஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.   தம்பதிக்கு பிறந்த குழந்தை மன வளர்ச்சி குன்றி பிறந்து இருக்கிறது.   இதனால் குழந்தை பிறந்ததில் இருந்து மன வருத்தத்தில் இருந்திருக்கிறார் சுஷ்மா .  

தற்போது அந்த சிறுமிக்கு ஐந்து வயது ஆகிறது.   இந்த நிலையில் அந்த  சிறுமியை கடந்த சில மதங்களுக்கு முன்பாக ரயில் நிலையத்தில் விட்டு விட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். பின்னர் கணவர் தேடிப் பிடித்து அந்த குழந்தையை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார்.

 இந்த நிலையில் மன வளர்ச்சி குன்றிய அந்த குழந்தையை வளர்க்க மனம் இல்லாத அந்த கொடூரத்தாய் நான்காவது மாடியில் இருந்து அந்த குழந்தையை பிடித்து தள்ளுகிறார்.  அந்த குழந்தை பயத்தில் தாயின் கழுத்தை இறுக பிடித்துக்கொண்டிருக்க,  ஆனால் கையை வலுக்கட்டாயமாக பிடித்து உதறிவிட்டு கீழே தள்ளுகிறார் சுஷ்மா.  இதில் கீழே விழுந்ததுமே பரிதாபமாக அந்த குழந்தை உயிரிழந்திருக்கிறது.

மாடிப்பிடியை  பிடித்துக் கொண்டே அப்படியே நிற்கிறார்.  இதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்து சுஷ்மாவை பிடித்து இழுத்து விடுகிறார்கள் .  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சம்பங்கி ராம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுஷ்மாவை கைது செய்துள்ளனர்.   இந்த கொடூர சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.