கன்னியாகுமரியில் காத்துவாக்குல ரெண்டு காதல் செய்த இளம்பெண்! அதன்பின் நடந்த விபரீதம்

 
love

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே  இன்ஸ்டாகிராம் காதலியின் முன்னாள் காதலனை கடத்தி சென்று போதை கும்பலுடன் தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் போதை கும்பல் ஒன்று வாலிபர் ஒருவரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கும் பரபரப்பு வீடியோ ஒன்று கடந்த வாரம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து தாக்குதலுக்கு உள்ளான அந்த வாலிபர் யார்? அவரை தாக்கிய போதை கும்பலுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு என விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் டி.எஸ்.பி தங்கராமன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.


உத்தரவின் பேரில் விசாரணையில் இறங்கிய தனிப்படை போலீசார் தாக்குதலுக்கு உள்ளான கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியை சேர்ந்த 19-வயதான கல்லூரி மாணவன் ஷைஜூ பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவன் அளித்த தகவல்களின் அடிப்படையில், ஷைஜூக்கு இன்ஸ்டாகிராம் மூலம் வாகவிளை பகுதியை சேர்ந்த அதுல்யா என்ற கல்லூரி மாணவிக்கும் ஒரு வருடத்திற்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இன்ஸ்டாவில் பழகி காதலை வளர்த்து கொண்ட இருவரும் நேரில் சந்தித்து அடிக்கடி ஜோடியாக ஊர் சுற்றுவதை வாடிக்கையாக்கியுள்ளனர். அதுல்யா வசதி படைத்தவர் என்பதால் தாராளமாக காதலன் ஷைஜூவுக்கு விலையுயர்ந்த பரிசு பெருட்களையும் வாங்கி கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் ஷைஜூ அதுல்யாவிடம் தனக்கு அவசர செலவுக்கு பணம் தேவைப்படுவதாக கூறி அவருடைய தங்க சங்கிலி மோதிரம் என 4-சவரன் தங்க நகைகளை கழற்றி வாங்கியுள்ளார். ஆனால்அ தற்கு பின் ஷைஜூ அதுல்யா உடனான தொடர்பை முற்றுலுமாக துண்டித்த நிலையில் பலமுறை அதுல்யா செல்போனில் தொடர்பு கொண்டும் ஷைஜூ கண்டு கொள்ளவில்லை.


இந்தநிலையில் அதுல்யாவிற்கு மீண்டும் இன்ஸ்டா மூலம் கருங்கல் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்ற மற்றொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் சதீஷ்குமாரை தொடர்பு கொண்ட அதுல்யா பள்ளியாடி அருகே உள்ள தேனீர் கடைக்கு அவனை வரவழைத்து ஷைஜூவை காதலித்து வந்ததை மறைத்து நாடகமாடி அவனை காதலிப்பதாக கூறியுள்ளார். ஷைஜுவை அவரது நண்பர் என்று பொய்யாக சதீஷ்குமாரிடம் கூறியுள்ளார். ஷைஜூ 4-சவரன் தங்க நகைகளை ஏமாற்றி வாங்கியதாகவு,ம்,  எனவே என்னிடம் இருந்து நகைகளை திரும்ப வாங்கி தருமாறு அதுல்யா அவனிடம் சொல்லியுள்ளார்.  இதனையறிந்த ஷைஜூ அதுல்யாவின் தாயிடன் அவரின் இரண்டாவது காதலை போட்டுடைத்துள்ளார்.இதுகுறித்து அதுல்யா சதீஷ்குமாரிடம் கூறியுள்ளார்.

காதலியின் கண்ணீரை கண்ட சதீஷ்குமார் அவரை ஆறுதல் கூறி அனுப்பி வைத்ததோடு கடந்த மாதம் 20-ம் தேதி அவரது நண்பர் மூலம் ஷைஜூவை அழைத்து கடத்தி சென்று மண்டைக்காடு பகுதியில் உள்ள இடுகாட்டில் வைத்து தனது போதை நண்பர்களுடன தன்னை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனையடுத்து அதுல்யாவிடம் விசாரணை நடத்திய மண்டைக்காடு போலீசார் சம்பவம் உண்மை என தெரியவரவே ஷைஜூ அளித்த புகாரின் பேரில் அதுல்யாவின் இரண்டாவது இன்ஸ்டா காதலன் சதீஷ்குமார், அவரது நண்பர்கள் ஆனந்தராஜ்., விஷ்ணு., சஞ்ஜய்., ராகுல் ஆகிய 5-பேர் மீது வழக்கு பதிவு செய்ததோடு அதுல்யாவின் இரண்டாவது காதலன் சதீஷ்குமார், அவரது நண்பர் ஆனந்தராஜ் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர் மேலும் தலைமறைவாக இருக்கும் மூன்று பேரை தேடி வருகின்றனர்.