இளம்பெண் ஆபாச வீடியோ - சிக்கிய சிறை வார்டன்கள்
இளம்பெண்ணை அழைத்து உல்லாசமாக இருந்ததோடு அல்லாமல் அதை வீடியோவாக எடுத்து அப்பெண்ணை மிரட்டி வந்த சேலம் மத்திய சிறை வார்டன்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
சேலம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் சேலம் மத்திய சிறையில் வார்டன்களாக இருக்கும் அருண், சிவசங்கர் ஆகிய இரண்டு பேரும் தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுவதாக போலீசில் புகார் அளித்திருக்கிறார். இந்த புகாரின் பேரில் சேலம் அஸ்தம்பட்டி அருகே இருக்கும் சிறை காவலர் குடியிருப்புக்கு சென்ற போலீசார் அருண், சிவசங்கர் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.
விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அருண், கொண்டாலம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் இரண்டு பேரும் சேலம் மத்திய சிறையில் வார்டன்களாக இருப்பது தெரிய வந்தது. சேலம் பேருந்து நிலையத்தில் அந்த இளம் பெண்களுடன் இந்த இரண்டு வார்டன்களுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
அந்த பழக்கத்தில் அந்த பெண்ணிடம் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டு இருவரும் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார்கள் . அதில் ஏற்பட்ட பழக்கத்தில் அந்த இளம் பெண்ணை தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்று இரண்டு வார்டன்களும் உல்லாசமாக இருந்திருக்கிறார்கள். அப்போது அப்பெண்ணுக்கு தெரியாமல் அதை வீடியோவாக எடுத்து வைத்துள்ளார்கள்.
அந்த ஆபாச வீடியோவை காட்டி அப்பெண்ணை மிரட்டி வந்திருக்கிறார்கள். இதனால் பெண் போலீசுக்கு சென்றிருக்கிறார் என்ற விவரங்கள் எல்லாம் தெரிய வந்திருக்கிறது. இதை அடுத்து சிறை வார்டன்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.