மகள் குளிப்பதை எட்டிப்பார்த்த தந்தை - தொடர் பாலியல் தொல்லை
மகள் குளிப்பதை பெற்ற தந்தையே எட்டிப் பார்த்திருக்கிறார். ஏழாம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுமி இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தாலும் யாரிடமும் சொல்லாமல் இருந்ததால், இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தந்தை பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். பெற்ற தந்தை என்பதால் அந்த சிறுமியும் என்ன செய்வதென்று அதிர்ச்சியிலிருந்து இருந்திருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் தந்தையின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் தாயாரிடம் சொல்ல போலீசில் புகார் அளித்து அந்த தந்தையை கைது செய்துள்ளார் போலீசார்.
புதுச்சேரி மாநிலத்தில் முதலியார் பேட்டை பகுதியை சேர்ந்த சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி. 45 வயதான அவருக்கு 12 வயதில் மகள் உள்ளார். அந்த சிறுமி அதே பகுதியில் இருக்கும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.
ஒரு நாள் தன் மகள் வீட்டில் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தபோது தந்தை அதை மறைந்து நின்று எட்டி பார்த்திருக்கிறார். இதை அந்த சிறுமி கவனித்திருக்கிறார். பெற்ற தந்தை இப்படி செய்தது அந்த சிறுமியால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அதிர்ச்சியில் இருந்து இருக்கிறார்.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தந்தை மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் இதற்கு மேலும் பொறுமையாக இருப்பதில் அர்த்தம் இல்லை என்று தாயாரிடம் சொல்லி அழுது இருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார் முதலியார் பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அந்த கட்டிட தொழிலாளியை கைது செய்துள்ளனர்.