நாங்கள் ஐந்து பேரும் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தலையில் அடித்து கொலை செய்தோம் - சிறுவன் வாக்குமூலம்

 
g

15 வயது சிறுமியை  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தலையில் கல்லை போட்டு கொலை செய்த சிறுவன் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த கொடூர சம்பவம்.

 ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சியில் 15 வயது சிறுமியுடன் 15 வயது சிறுவன் நெருங்கி  பழகி வந்திருக்கிறான்.  அந்த சிறுமி வேறொரு சிறுவனுடன் அதிகம் பேசி வந்ததால் தன்னுடன் நெருங்கி பழகி வந்த அந்த சிறுமி இன்னொருவனுடன்  பழகுவதா என்று அந்த சிறுவனுக்கு ஆத்திரம் ஏற்பட்டிருக்கிறது.  இதனால் அந்த சிறுமியை பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறான்.

gg

 அதன்படி கடந்த 23ம் தேதி அன்று அந்த சிறுமி சகோதரியுடன் வயல்வெளிக்குச் சென்றபோது தனது நண்பர்கள் 4 பேரை அழைத்துக் கொண்டு பின் தொடர்ந்து இருக்கிறான்.   மாலை நேரம் வந்ததும் சகோதரி வீடு திரும்ப அந்த சிறுமி மட்டும் கொஞ்ச நேரம் இருந்து விட்டு வருகிறேன் என்று வயல்வெளியில் சுற்றி திரிந்திருக்கிறார். 

 அப்போது அங்கே மறைந்து நின்ற ஐந்து பேரும் அந்த சிறுமியின் வாயை பொத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.  பின்னர் செங்கல் மற்றும் கருங்கல்லை கொண்டு தலையில் அடித்து கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள்.   இதன் பின்னர் ஐந்து பேரும் அங்கிருந்து தப்பி சென்று இருக்கிறார்கள்.  வயல்வெளிக்குச் சென்ற சிறுமி வீடு திரும்பாததால் இரவில் வயல்வெளியில்  அங்கே இங்கே தேடிப் பார்த்துவிட்டு கடைசியில் சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளார்கள்.

 போலீசார் அந்த சிறுமியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது வயல்வெளியில் சிக்னல் காட்டி இருக்கிறது.  சிக்னல் காட்டிய இடத்தை போலீசார் சென்று பார்த்த போது அங்கே தலையில் கொடூரமாக தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்திருக்கிறார் அந்த சிறுமி.  இதை பார்த்து  பெற்றோர் கதறி அழுகிறார்கள். அதன் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சிறுவன் உட்பட அவனது நண்பர்கள்  ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.  நாங்கள் ஐந்து பேரும் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து  தலையில் அடித்து கொலை செய்தோம்  என்று சிறுவன் வாக்குமூலம் அளித்திருக்கிறான். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருக்கிறார்கள் போலீசார்.