13வயது சிறுமிக்கு பிரசவம் - தந்தை போக்சோவில் சிறையிலடைப்பு

 
g

பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்ததில் அந்த  13 வயது சிறுமி ஒருவர் குழந்தை பெற்று இருக்கிறார்.  அந்த குழந்தைக்கு காரணம் பெற்ற தந்தை தான் என்பது தெரிய வந்ததும் போலீசார் அவரை கைது கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 வேலூர் மாவட்டத்தில் விருப்பாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்  45 வயதான கூலித்தொழிலாளி சங்கர்.   அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் மனைவி அவரைப் பிரிந்து சென்று வேறு ஒருவருடன் வாழ்ந்து வருகிறார்.  

r

 சங்கருக்கு 15 வயதில் ஒரு மகனும் 13 வயதில் ஒரு மகளும் உள்ளார்கள்.  இவர்கள் இருவரும்  சங்கருடன் வாழ்ந்து வருகிறார்கள்.  இந்த நிலையில் திடீரென்று சங்கரின் 13 வயது மகள் வயிற்று வலியால் துடித்திருக்கிறார்.   அவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்.  அங்கு அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

 திருமணமாகாமல் குழந்தை பிறந்ததால் அதுவும் 13 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்ததால் வேலூர் சமூக நலத்துறைக்கு மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் கொடுத்துள்ளனர்.  இதை அடுத்து வேலூர் சமூக நலத்துறையினர் விசாரணையை நடத்தியதில் அந்தப்  சிறுமியின் குழந்தைக்கு காரணம் தந்தை சங்கர்தான் என்பது தெரியவந்து அதிர்ந்து போய் இருக்கிறார்கள்.   இதை அடுத்து வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

 இந்த புகாரின் அடிப்படையில் சங்கர்  மீது கோக்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.  அதன் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

 பெற்ற தந்தையே மகளைக் கர்ப்பமாக்கி மகளின் கையில் குழந்தையை கொடுத்திருக்கும் சம்பவம் விருப்பாச்சிபுரம்  பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.