வரதட்சணை பிரச்னையால் ஏற்பட்ட கொடூரம்: முதலிரவில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கணவன் மற்றும் மைத்துனன்

 

வரதட்சணை பிரச்னையால் ஏற்பட்ட கொடூரம்:  முதலிரவில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கணவன் மற்றும் மைத்துனன்

வரதட்சணை பிரச்னை காரணமாக முதலிரவின் போது கணவன் மற்றும் கணவனின் தம்பியால் பெண் ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் : வரதட்சணை பிரச்னை காரணமாக முதலிரவின் போது கணவன் மற்றும் கணவனின் தம்பியால் பெண் ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணுக்குக் கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி திருமணம் நடந்தது. அப்போது பெண் வீட்டாரிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அன்று இரவு முதலிரவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 

கூட்டு பாலியல் வன்கொடுமை:

sexual harassmnet

இந்நிலையில் அப்பெண்ணின்   கணவன் மற்றும் கணவனின் தம்பி இருவரும் சேர்ந்து, அவளை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து, காலையில் ரத்தப்போக்குடன்  கிடந்த அப்பெண்ணை உறவினர்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். தற்போது அந்தப் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கைது செய்த போலீசார் 

arrest

இந்த சம்பவம் குறித்து, பெண்ணின் அண்ணன் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் நடத்திய விசாரணையில், வரதட்சணை பிரச்னை காரணமாகக் கணவனும் கணவனின் தம்பியும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்திருப்பது  தெரியவந்துள்ளது.  இதையடுத்து பெண்ணின் கணவன், மைத்துனன் மற்றும் குடும்பத்தினர் மீது  கூட்டுப் பாலியல் வன்கொடுமை, வரதட்சணைக் கேட்டு கொடுமைப் படுத்துதல், பெண்ணை  துன்புறுத்துதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.