பல மாதங்களாக படப்பிடிப்புகள் நிறுத்தம் ! மனஅழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட நடிகை !

 

பல மாதங்களாக படப்பிடிப்புகள் நிறுத்தம் ! மனஅழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட நடிகை !

தொலைக்காட்சி நடிகை பிரேக்ஷா மேத்தா மத்திய பிரதேசத்தின் இந்தூரில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். க்ரைம் ரோந்து, மேரி துர்கா, மற்றும் லால் இஷ்க் ஆகிய தொடர்கள் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை பிரேக்ஷா மேத்தா. பிரேக்ஷா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
தனது இன்ஸ்டாகிராமில் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளர் அவர் தன்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் பிரீக்ஷா மேத்தா தற்கொலைக்கான காரணத்தை அறிய போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முதற்கட்டட விசாரணையில் பிரேக்ஷா மேத்தா ஒரு தொலைக்காட்சி நடிகை, அவர் ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்ததால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பிரேக்ஷா மேத்தா தற்கொலை செய்து கொண்டு இறந்ததற்கு ஏக் பிரேம் கதா மற்றும் ஜட்ஜ்மென்டல் ஹை க்யா புகழ்பெற்ற நடிகை ரிச்சா திவாரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பல மாதங்களாக படப்பிடிப்புகள் நிறுத்தம் ! மனஅழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட நடிகை !சில நாட்களுக்கு முன்பு, ஒரு தொலைக்காட்சி நடிகர் மன்மீத் க்ரூவால் வேலையின்மை மற்றும் பணம் பிரச்சனை காரணமாக தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார், இப்போது 25 வயதான பிரேக்ஷா மேத்தா மத்திய பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக அனைத்து திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி திட்டங்களின் படப்பிடிப்புகள் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.;