“கட்டை பஞ்சாயத்தும் ,கந்து வட்டியும் …” -எப்படி இருந்த சித்தாரா இப்படி சொர்ணாக்காவா மாறிட்டாங்களே ..

 

“கட்டை பஞ்சாயத்தும் ,கந்து வட்டியும்  …” -எப்படி இருந்த சித்தாரா இப்படி சொர்ணாக்காவா மாறிட்டாங்களே ..

குஜராத்தின் அஹமதாபாத் பாபுநகரைச் சேர்ந்த 33 வயதான சித்தாரா என்ற பெண், அந்த பகுதியில் தன்னுடைய சகோதரர்கள் சிகந்தர், சர்வர் மற்றும் ஆபிட்ஆகியோருடன் சேர்ந்து கொண்டு ரௌடிசம் செய்து கொண்டு இருப்பதால் அந்த பகுதி மக்கள் அவருக்கு பயந்து கொண்டு அந்த ஏரியாவை காலி செய்து கொண்டு போகும் நிலை வந்துள்ளது .


போலீசாரால் உருவாக்கப்பட்ட சித்தாரா என்ற அந்த பெண் ரௌடி பத்து ஆண்டுகளுக்கு முன்னாள் சாராயம் காய்ச்சும் தொழில் மூலம் மாதம் 3 லட்சம் மாமூல் கொடுத்து வந்தார் .அவர் தன்னுடைய சகோதர்களை வைத்து கொண்டு அந்த பாபு நகர் பகுதியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் .அவர்களுக்கு கட்டை பஞ்சாயத்து செய்வதும் ,சரக்கு பாட்டில் விற்பதும் ,கொலை ,கொள்ளை போன்ற சமூக விரோத செயல் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்துள்ளார் .போலீசில் அவருக்கு இருக்கும் சில நபர்கள் மூலம் அவரின் ஆட்சி அங்கு கொடி கட்டி பறக்கிறதாம் .
அந்த பகுதியில் சேர்ந்த ஒரு சமூக சேவகர் சித்திக் என்பவர் கூறும்போது ,அவர்கள் அந்த பகுதியை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார்கள் ,யாராவது எதிர்த்து கேள்வி கேட்டாலோ ,அல்லது போலீசுக்கு போனாலோ அவர்களை ஒரு வழி பண்ணி விடுவார்கள் .அவர்களுக்குப்பயந்து பலர் அந்த பகுதியை விட்டே காலி செய்து விட்டு போய் விட்டார்கள் என்றார் .ஒரு சாதாரண டீ கடைக்காரரான அவரின் தந்தை அவரின் தாயை விட்டு ஓடி விட்டதால் ,நல்ல பெண்ணாக இருந்த சித்தாரா இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார் என்று அவர் மேலும் கூறினார் .