‘இந்தக் கொடூரச் செயலுக்கு நீதி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்’ சாத்தான் குளம் விவகாரம் பற்றி கிரிக்கெட் வீரர் அஸ்வின்
சாத்தான் குளத்தில் இறந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குறித்துப் பிரபல கிரிக்கெட் வீரர் தனது ட்விட்டர் பக்கத்தில் தம் கருத்தைப் பதிவுசெய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தில் கடை வைத்திருப்பவர் ஜெயராஜ். இவரின் மகன் பென்னிக்ஸ். கொரோனா ஊரடங்கால் குறிப்பிட்ட நேரம் மட்டுமே கடைகள் திறந்திருக்க வேண்டும் என்பது அரசின் ஆணை. அதன்படி கடந்த 19-ம் தேதி அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து கடைகளை யாரேனும் திறந்திருக்கிறார்களா என்று பார்க்கச் சென்றனர் காவல் துறையினர். ஜெயராஜின் கடை திறந்திருந்தது. அதுவும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விடச் சில நிமிடங்களே ஆகியிருந்தது.
இதனை அடுத்து, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கும்போது உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிடுகிறது. இதனால் சிகிச்சைக்குச் சென்றாலும் அது பலன் அளிக்காமல் இருவரும் இறந்துவிடுகின்றனர். இருவரின் மரணத்துக்குக் காவல்துறையே காரணம் என்று பரவலாகப் பேசப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் பல குற்றசாட்டுகளைக் காவல் துறை மீது வைத்து வருகிறது.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தின் தாக்கம் தமிழகம் தாண்டி இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இம்மரணத்திற்குக் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ட்விட்டரில் வருத்தத்தோடு இது குறித்துக் கருத்தைப் பதிந்துள்ளார்.
Every single life matters. We should make sure that this act of brutality is meted out with justice, and I am not sure justice will be any solace for the family of #JeyarajandFenix and my thoughts are with them.
— Mask up and take your vaccine🙏🙏🇮🇳 (@ashwinravi99) June 26, 2020
“ஒவ்வொரு உயிரும் முக்கியமானது. இந்தக் கொடூரச் செயலுக்கு நீதி கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். நீதி கிடைத்தலும் அது அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் அளிக்குமா என்று தெரியவில்லை. இதுபோன்ற ஹேஷ்டேக்குகளை நாம் பயன்படுத்துவது இறுதியாக இருக்க வேண்டும்.”