இன்னும் 2 மாதத்தில் சென்னை மைதானத்தில் கிரிக்கெட் போட்டி!

 

இன்னும் 2 மாதத்தில் சென்னை மைதானத்தில் கிரிக்கெட் போட்டி!

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு
Cricket match at Chennai ground in 2 more months!வருகிறது. இதில் ஒருநாள் தொடரை இந்தியா இழந்தாலும் டி20 தொடரைக் கைப்பற்றி விட்டது. தமிழக வீரர் நடராஜன் எல்லோரின் பாராட்டுகளையும் பெற்றுவருகிறார். அடுத்து 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்து இந்தியா திரும்புகிறது கிரிக்கெட் அணி.

அடுத்து, இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு வந்து போட்டிகளில் ஆட இருக்கிறது. அதில் 4 டெஸ்ட் போட்டிகளும், ஐந்து டி20 போட்டிகளும், 2 ஒருநாள் போட்டிகளும் நடக்க உள்ளன.

இன்னும் 2 மாதத்தில் சென்னை மைதானத்தில் கிரிக்கெட் போட்டி!

முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5-ம் தேதியும் இரண்டாம் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 13-ம் தேதியும் தொடங்குகிறது. இந்த இரண்டு போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

சென்னை மைதானத்தில் கொரோனா காரணமாக ஓராண்டுக்கு மேலாக எந்தப் போட்டியும் நடைபெற வில்லை. ஐபிஎல் போட்டிகள்கூட ஐக்கிய அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. அதனால், இந்தப் போட்டியை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள். ஆனால், ரசிகர்களுக்கு அனுமதி கொடுக்கும் அளவுக்கு சூழல் மாறியிருக்குமா என்பது தெரியவில்லை.

இன்னும் 2 மாதத்தில் சென்னை மைதானத்தில் கிரிக்கெட் போட்டி!

மூன்று மற்றும் நான்காம் டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத் மைதானத்தில் நடக்கின்றன. டி20 போட்டிகள் அனைத்துமே அகமதாபாத்தில்தான் நடக்கின்றன.

மார்ச் 23 மற்றும் 26 -ம் தேதிகளில் நடக்கும் ஒருநாள் போட்டிகள் இரண்டும் புனே மைதானத்தில் நடக்கின்றன.