“அண்ணனுக்கு பக்கத்திலே என்னையும் புதைங்க ” அண்ணன் இறந்த அதிர்ச்சியில் தற்கொலை செய்து இறந்த தங்கை.

 

“அண்ணனுக்கு பக்கத்திலே என்னையும் புதைங்க ” அண்ணன் இறந்த அதிர்ச்சியில் தற்கொலை செய்து இறந்த தங்கை.

குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள ரமோலில் தனது சகோதரர் முறையுள்ள உறவினர் தற்கொலை செய்து கொண்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவரின் 17 வயது தங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த குடும்பத்தில் சோகத்தை உண்டாக்கியுள்ளது .

உத்தரபிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட ஒரு 10 ஆம் வகுப்பு மாணவி, ரமோலின் ரவினகர் பகுதியில் தனது பெற்றோர் மற்றும் மூன்று சகோதரர்களுடன் வசித்து வந்தார். அதே வட்டாரத்தில் வசித்து வந்த அவரது அண்ணண் முறை உறவினர், அவரது மனைவி விபத்தில் இறந்த பின்னர் இரண்டு வாரங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

“அண்ணனுக்கு பக்கத்திலே என்னையும் புதைங்க ” அண்ணன் இறந்த அதிர்ச்சியில் தற்கொலை செய்து இறந்த தங்கை.
அவரின் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருந்த இந்த தங்கை,அவரின் மரணத்தால் மிகவும் சோகமாக காட்சியளித்தார் ,இதனால் கடந்த சனிக்கிழமையன்று அவர் தன்னுடைய வீட்டில் தன்னுடைய துப்பட்டாவால் தூக்கு போட்டு இறந்தார் .பிறகு அவரின் அறைக்கு, அவரை சாப்பிட அழைக்க சென்ற அவரின் தம்பி ,தன்னுடைய சகோதரி தற்கொலை செய்து கொண்ட செய்தியை தன்னுடைய தாயிடம் கூறினார் .உடனே ஓடி சென்று அவரின் தாய் அவரை பார்த்து அழுது, போலீசுக்கு தகவல் தெரிவித்தார் .போலீசார் வந்து அந்த இடத்தை சோதனை செய்ததில் இறக்கும் முன்பு அந்த பெண் எழுதிய தற்கொலை குறிப்பை கைப்பற்றினார்கள் .அந்த குறிப்பில் அவர் தன்னுடைய அண்னன் இறந்ததால் , தானும் அவரை தேடி போவதகவும் ,அவரின் கல்லறைக்கு பக்கத்திலேயே தன்னை புதைக்க வேண்டுமென்று கேட்டுகொண்டார் .போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .

“அண்ணனுக்கு பக்கத்திலே என்னையும் புதைங்க ” அண்ணன் இறந்த அதிர்ச்சியில் தற்கொலை செய்து இறந்த தங்கை.