தூத்துக்குடி துறைமுக கப்பல் தளத்தில் தவறி விழுந்து கிரேன் ஆப்பரேட்டர் பலி!

 

தூத்துக்குடி துறைமுக கப்பல் தளத்தில் தவறி விழுந்து கிரேன் ஆப்பரேட்டர் பலி!

தூத்துக்குடி

தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் கப்பல் தளத்தில் இருந்து தவறி விழுந்த கிரேன் ஆப்பரேட்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி பி.அன்.டி காலனி 6-வது தெருவை சேர்ந்தவர் கந்த வேல்முருகன். இவரது மகன் சுரேஷ் (42). இவர் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் 7-வது கப்பல் தளத்தில் கிரேன் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் தேனீர் அருந்தி விட்டு மீண்டும் கிரேனை இயக்குவதற்காக சுரேஷ் மேலே ஏறிக் கொண்டிருந்தார். 50 அடி உயரத்தில் ஏறிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கால் தவறி சுரேஷ் கீழே விழுந்தார்.

தூத்துக்குடி துறைமுக கப்பல் தளத்தில் தவறி விழுந்து கிரேன் ஆப்பரேட்டர் பலி!

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த தெர்மல் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்