கேரள யானை அன்னாசி பழத்தை சாப்பிடவில்லை! வெளியான புதிய தகவல்

 

கேரள யானை அன்னாசி பழத்தை சாப்பிடவில்லை! வெளியான புதிய தகவல்

கேரளாவில் உணவு தேடி ஊருக்குள் வந்த பெண் யானைக்கு வெடிமருந்து நிரம்பிய அன்னாசி பழத்தை உள்ளூர்வாசிகள் கொடுத்ததாகவும், அதனை உண்டபோது யானையின் வாயில் வெடித்து காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. உணவு உண்ண முடியாமலும், வலியிலும் துடித்து யானை உயிரிழந்த சம்பவம் சில தினங்களுக்கு முன்பு வெளிச்சத்துக்கு வந்தது. இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் கேரளாவில் யானை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில வனத்துறை ட்விட்டரில் பதிவிட்டது.

கேரள யானை அன்னாசி பழத்தை சாப்பிடவில்லை! வெளியான புதிய தகவல்

கேரளாவில் பெண் யானை உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர், பன்றிகளுக்காக வைக்கப்பட்ட வெடிமருந்து நிரம்பிய தேங்காயை யானை உண்டதாக தெரிவித்துள்ளார். யானை உயிரிழந்தது தொடர்பாக வில்சன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பன்றிகளை விரட்டி அடிக்க வெடிமருந்து நிரப்பிய தேங்காயை நிலத்தில் வைப்பது வழக்கம் என்றும், அந்த தேங்காயைதான் யானை உண்டதாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் இருவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.