“சிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு குருமூர்த்தி” – முத்தரசன் விமர்சனம்!

 

“சிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு குருமூர்த்தி” – முத்தரசன் விமர்சனம்!

சிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு போல் குருமூர்த்தி இருக்கிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.

“சிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு குருமூர்த்தி” – முத்தரசன் விமர்சனம்!

துக்ளக் ஆண்டுவிழா சென்னையில் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, ஊழல்வாதிகளுக்கு தாமதமாக தண்டனை கிடைக்கிறது. நீதிபதிகள் அனைவரும் அரசியல்வாதிகளால் நியமிக்கப்பட்டவர்கள் . யாருடைய கால்களைப் பிடித்தாவதுதான் அந்த வாய்ப்பைப் பெறுகிறார்கள் என்றார். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் குருமூர்த்தி வருத்தம் தெரிவித்தார்.

“சிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு குருமூர்த்தி” – முத்தரசன் விமர்சனம்!

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த போது, “தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது; இதுவரை நிதி எதுவும் வழங்கப்படவில்லை; தமிழக அரசு உடனே அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, நிதி பெறுவதற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். சிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு குருமூர்த்தி; அவரை யாரும் எதுவும் செய்ய முடியவில்லை என்று நீதிபதி, அமைச்சர்களை குருமூர்த்தி விமர்சித்து வருவது குறித்து விமர்சித்துள்ளார். முன்னதாக நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசிய குருமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.