சங்கரன்கோவில் அருகே மாட்டு வியாபாரி அடித்துக்கொலை… போலீசார் விசாரணை…

 

சங்கரன்கோவில் அருகே மாட்டு வியாபாரி அடித்துக்கொலை… போலீசார் விசாரணை…

தென்காசி

சங்கரன்கோவில் அருகே மாட்டு வியாபாரி மர்மநபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த பாட்டத்தூரை சேர்ந்தவர் தமிழன். இவர் அதே பகுதியில் மாடு வியாபாரம் செய்து வந்தார். இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற தமிழன் மீண்டும் வீடு திரும்பில்லை. இதனால் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

சங்கரன்கோவில் அருகே மாட்டு வியாபாரி அடித்துக்கொலை… போலீசார் விசாரணை…

இந்த நிலையில், நேற்று காலை வேப்பங்குளம் விலக்கு அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில், சின்ன கோவிலான்குளம் போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில், உயிரிழந்த நபர் மாட்டு வியாபாரி தமிழன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, உடலை பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே தமிழனை கொன்றவர்களை கைதுசெய்ய கோரி, சங்கரன்கோயில் தேரடி பகுதியில் அவரது உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சங்கரன்கோவில் நகர போலீசாரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், அவர்கள் கலைந்து சென்றனர்.