நீதிமன்ற பெண் ஊழியரை கொலை செய்து, கள்ளக்காதலன் தற்கொலை!

 

நீதிமன்ற பெண் ஊழியரை கொலை செய்து, கள்ளக்காதலன் தற்கொலை!

கரூர்

குளித்தலை அருகே நீதிமன்ற பெண் ஊழியருக்கு மதுவில் விஷம் கலந்துகொடுத்து கொலை செய்த கள்ளக்காதலன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாகனூர் ஒன்றியம் நல்லாகவுண்டன் பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (32). மாட்டு வியாபாரி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். ஆறுமுகத்திற்கு கலிங்கப்பட்டியை சேர்ந்த சிவபாக்கியம் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

நீதிமன்ற பெண் ஊழியரை கொலை செய்து, கள்ளக்காதலன் தற்கொலை!

திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த சிவபாக்கியம், கரூர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். தொடக்கத்தில் நட்பு ரீதியில் இருவரும் பழகி வந்த நிலையில், நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனால், அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று இரவு சிவபாக்கியத்தை நல்லாகவுண்டன் பட்டியில் உள்ள தனது தோட்டத்துக்கு ஆறுமுகம் அழைத்துச் சென்றார். அங்கு இருவரும் நீண்ட நேரம் பேசி கொண்டிருந்த நிலையில், அதிகாலையில் சிவபாக்கியத்துக்கு மதுவில் வி‌ஷம் கலந்து கொடுத்து கொன்றுவிட்டு, ஆறுமுகம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீதிமன்ற பெண் ஊழியரை கொலை செய்து, கள்ளக்காதலன் தற்கொலை!

இன்று காலை தோட்டத்திற்கு சென்றவர்கள், இருவரும் சடலமாக கிடந்ததை பார்த்து, தோகமலை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார், இரு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, தற்கொலை செய்வதற்கு முன்பாக ஆறுமுகம் எழுதிய கடிதம் சிக்கியது. அதில், தன்னை சிவபாக்கியத்துடன் சேர்த்து ஒரே பாடையில் எரிக்கும்படி அவர் எழுதி இருந்தார். கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.