மிரட்டும் மூணாவது அலையை வரட்டும் ஒரு கை பார்க்கலாம்-சுகர் பேஷண்டுக்கான டிப்ஸ்

 

மிரட்டும் மூணாவது அலையை வரட்டும் ஒரு கை பார்க்கலாம்-சுகர் பேஷண்டுக்கான டிப்ஸ்

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மோசமான விளைவை உண்டாக்குகிறது. இதனால் ஆரோக்கியமான உடலை கொண்டிருக்கும் இளவயதினரும் கூட கொரோனா அபாயத்தை கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நோய்த்தொற்றின் தீவிரத்தன்மை நீரிழிவு நோயாளிகளுக்கு இன்னும் இறப்பு அபாயங்களை உண்டாக்குகின்றன. சில அறிகுறிகளை கொண்டு நீரிழிவு நோயாளிகள் மூணாவது அலை கொரோனாவை தீவிரமாகாமல் தடுக்கலாம்.

​நீரிழிவு நோயாளிகள்

இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் போது உடலில் இன்சுலின் உற்பத்தி சமரசம் செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அடக்குகிறது. நீரிழிவு கொண்டுள்ள ஒரு நபர் ஊட்டச்சத்தை பயன்படுத்துவது கடினமானது. மோசமான இரத்த ஓட்டம் உடலில் நீண்டகால பிரச்சனைகளை உண்டாக்கலாம்.

மிரட்டும் மூணாவது அலையை வரட்டும் ஒரு கை பார்க்கலாம்-சுகர் பேஷண்டுக்கான டிப்ஸ்

கொரோனாவை போன்றே நீரிழிவு கொண்டிருப்பவர்களும் வைரஸ் எதிர்த்து போராடுவது கடினமாக்கும். அதோடு இது பிற நோய்களையும் வரவழைக்க கூடும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத நீரிழிவு நோயாளிகளுக்கு வாஸ்குலர் பிரச்சனைகள் உள்ளன. இது அவர்களது இதய குறைபாடுகள், சுவாசக் குறைவு, நாள்பட்ட நுரையீரல் போன்றவற்றால் பாதிக்கப்படுவார்கள். இதனோடு கொரோனா அறிகுறிகளும் இருக்கலாம். இதனால் நீரிழிவு நோயாளிகள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

தோல் தடிப்புகள், நகங்கள் மற்றும் கால்விரல்களில் உண்டாகும் அறிகுறி !

கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளில் முக்கியமான அறிகுறிகள் தோல் வெடிப்பு, வீக்கம் மற்றும் ஒவ்வாமை அறிகுறிகள் போன்றவை. இந்த அசாதாரண அறிகுறிகள் மக்களை பாதிக்கின்றன. கொரோனா கால்விரல்கள், நகங்கள், படை நோய், சிவப்பு புள்ளிகள், SARS-COV – வைரஸின் சருமத்தில் ஏற்படும் அனைத்து அறிகுறிகளும் கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை அளவால் பாதிக்கப்படுபவர்களால் அனுபவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களும் தோல் அறிகுறிகள், வெட்டுகள் மற்றும் காயங்களிலிருந்து மெதுவாக குணமடைய வாய்ப்புண்டு. உயர் இரத்த சர்க்கரை சருமத்தை வறட்சியாக்கி, வீக்கம், சிவப்பு திட்டுகள், கொப்புளங்கள் போன்றவற்றை அதிகரிக்கும். இவை அனைத்தும் கொரோனா நோய்த்தொற்றுடன் இணைந்து அதிகரிக்க செய்யும்.

நீரிழிவு நோயாளிகள் தங்கள் சரும ஆரோக்கியத்தை கவனித்துகொள்வதிலும் கொரோனா வைரஸின் இந்த ஆரம்ப அறிகுறிகளை கவனிப்பதிலும் மிகுந்த முனைப்புடன் இருக்க வேண்டும்.

நிமோனியா ஆபத்து

நிமோனியா தீவிர ஆபத்து காரணியாக அச்சுறுத்தலாக மாறக்கூடும். இது நீரிழிவு நோயாளியுடன் போராடுபவர்களுக்கு அதிக அழற்சி அளவுகள் உண்டாக்கும். மேலும் கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை இருப்பதால் சுவாச ஆரோக்கியம் கடுமையான பாதக விளைவுகளை உண்டாக்கும். உயர் இரத்த சர்க்கரை அளவு டாக்டர்களின் கூற்றுப்படி வைரஸ் உடலில் செழித்து மேலும் சேதத்தை உண்டாக்குகிறது.

டைப் 1, டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபத்து சமமாகவே உள்ளது. நோய்த்தொற்றுகளின் இரண்டாவது அலையின் போது உயர் மட்ட நுரையீரல் ஈடுபாடு ஆபத்துகளை அதிகரிக்கும்.

ஆக்ஸிஜன் பற்றாக்குறை

கொரோனா தொற்று இருப்பவர்கள் எதிர்கொள்ளகூடிய மிகப்பெரிய சிக்கல்களில் ஆக்ஸிஜன் செறிவு அளவை குறைப்பதும் ஒரு அறிகுறியாகும். நோய் எதிர்ப்பு செயல்பாட்டை அடக்கும் நீரிழிவு போன்ற அழற்சி நிலையில் சர்க்கரை நோயாளிகள் பலவீனமான ஆரோக்கியத்தை கொண்டிருப்பார்கள். இவர்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் அது தொடர்புடைய அறிகுறிகளால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளது.

மூச்சுத்திணறல், மார்பு வலி, நுரையீரல் பிரச்சனைகள் மற்ற அறிகுறிகள் காணாமல் ஆக்ஸிஜன் அளவு விரைவாக குறையக்கூடும். ஹைபோக்ஸியா நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளிடம் பொதுவாக காணப்படுகிறது.

​கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை

கொரோனா பாதிப்பு அறிகுறிகளில் முகத்தின் குறைபாடு, வீக்கம், தலைவலி மற்றும் எரிச்சலை உண்டாக்கும். தற்போது கருப்பு பூஞ்சை தொற்று நீரிழிவு நோய் பாதிப்பு மற்றும் ஸ்டீராய்டு சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு அதிக தொல்லை தரக்கூடியதாக உள்ளது.

மருத்துவர்களின் கூற்றுப்படி நீரிழிவு போன்ற ஒரு அழற்சி நிலை நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை அடக்க செய்கிறது. மேலும் இது நோய்த்தொற்றுகளின் பிடியை மேலும் அதிகரிக்க செய்யும். உயர் இரத்த சர்க்கரை அளவுகள் வைரஸை போன்றே பூஞ்சைகளை இனப்பெருக்கம் செய்வதையும் அதிகரிக்கின்றன. அதோடு ஸ்டீராய்டும் இந்த ஆபத்தை அதிகரிக்க செய்யும்.