மூக்கில் ரத்தம்… கொதிக்கும் ஜுரம்… பச்சை கலரில் மிரட்ட வரும் பூஞ்சை!

 

மூக்கில் ரத்தம்… கொதிக்கும் ஜுரம்… பச்சை கலரில் மிரட்ட வரும் பூஞ்சை!

கொரோனாவின் தாக்கத்தையே மக்களால் தாங்கி கொள்ள முடியாத நிலையில் புதிய அபாயமாக கருப்பு பூஞ்சை நோய் உருவெடுத்த. தற்போது நாடு முழுவதும் அதிவேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக ராஜஸ்தான், ஒடிசா, பீகார், உத்தரப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களிலேயே அனேக பேருக்குப் பரவி வருகிறது. இதற்கு அடுத்தப்படியாக பீகாரில் சிலருக்கு வெள்ளை பூஞ்சை நோயும் கண்டறியப்பட்டது.

மூக்கில் ரத்தம்… கொதிக்கும் ஜுரம்… பச்சை கலரில் மிரட்ட வரும் பூஞ்சை!

கருப்பு பூஞ்சையை விட வெள்ளை பூஞ்சை மிகப் பயங்கரமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது. வெள்ளை பூஞ்சை நுரையீரலை மட்டுமல்லாமல் நகங்கள், தோல், வயிறு, சிறுநீரகம், மூளை, உள்ளிறுப்புகள் மற்றும் வாய் உள்ளிட்ட உடலின் பிற பகுதிகளையும் பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். சர்க்கரை நோய் போன்ற பலவீனமான நோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், புற்றுநோய் நோயாளிகள், நீண்ட காலத்திற்கு ஸ்டீராய்டுகளை உட்கொள்பவர்களுக்கு இவ்வகையான பூஞ்சை நோய்கள் ஏற்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.

மூக்கில் ரத்தம்… கொதிக்கும் ஜுரம்… பச்சை கலரில் மிரட்ட வரும் பூஞ்சை!

இவையிரண்டையும் விஞ்சும் அளவிற்கு மூன்றாவதாக மஞ்சள் பூஞ்சை நோய் உத்தரப் பிரதேசத்தில் கண்டறியப்பட்டது. இது மேற்கூறிய இரு பூஞ்சை நோய்களையும் விட அதி பயங்கரமானது என மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர். நல்வாய்ப்பாக இத்தகைய பூஞ்சை நோய்களுக்கு எதிரான மருந்துகள் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதேபோல கொரோனா போல ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவும் தன்மை கொண்டது அல்ல. நம் சுற்றுப்புறத்தை எப்போதுமே தூய்மையாக வைத்திருந்தாலே இதிலிருந்து தப்பிக்கலாம் என்று சொல்லப்பட்டது.

மூக்கில் ரத்தம்… கொதிக்கும் ஜுரம்… பச்சை கலரில் மிரட்ட வரும் பூஞ்சை!

இச்சூழலில் தற்போது நான்காவதாக பச்சை பூஞ்சை நோய் உருவெடுத்திருக்கிறது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 34 வயதான ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து சமீபத்தில் தான் குணமடைந்திருக்கிறார். இதையடுத்து மீண்டும் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பச்சை பூஞ்சை தொற்று ஏற்பட்டிருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். கொரோனாவால் அவரின் 90% நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதே நுரையீரலில் தான் பச்சை பூஞ்சை தாக்கியுள்ளது.

மூக்கில் ரத்தம்… கொதிக்கும் ஜுரம்… பச்சை கலரில் மிரட்ட வரும் பூஞ்சை!

இந்த நோயானாது கருப்பு பூஞ்சையிலிருந்து வித்தியாசமானது. மூக்கு வழியே ரத்தம் கசிதல், அதிகமான காய்ச்சல் உள்ளிட்ட அபாய அறிகுறிகள் இதன்மூலம் ஏற்படும். அவர் அவசர சிகிச்சைக்காக விமானம் வழியாக மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இவர் தான் நாட்டிலேயே பச்சை பூஞ்சை தொற்றாளர் என்பதால் அதன் பாதிப்பு எந்த அளவில் இருக்கும் என்பது தெரியவில்லை. ஆராய்ச்சியின் வழியாகவே கண்டறிய முடியும் என மருத்துவ வல்லுநர்கள் கூறியிருக்கின்றனர்.