கொரோனாவால் அனாதையான 1,700 குழந்தைகள்
நாடு முழுவதும் கொரோனாவால் 1,700 குழந்தைகள் தாய்- தந்தையை இழந்துள்ளனர்.
கோவிட் -19 இலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்த சூ மோட்டோ மனுவை விசாரித்தபோது கடந்த வாரம் உச்சநீதிமன்றம் கேட்ட கேள்விக்கு என்.சி.பி.சி.ஆரின் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதன்படி, தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா 1,7000 குழந்தைகள் அனாதையாகியுள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் 1,700 குழந்தைகள் தாய்- தந்தையை இழந்துள்ளனர். 7,400 பேர் பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளனர். அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில், பீகார் 1,327 பேரும், கேரளா 952பேரும் பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளனர்” என தெரிவித்துள்ளது.
தந்தை மற்றும் தாய் ஆகியோரை கொரோனாவால் இழந்த குழந்தைகளுக்கு PM Caresல் இருத்து ₹10 லட்சம் அளிக்கப்படும் எனவும், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்கல்விக்கு கடன் வழங்கப்படும் எனவும் இதற்கான வட்டி PM Caresல் இருந்து செலுத்தப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்தது குறிப்பிடதகக்து.