கொரோனா வார்டில் திருமணம்…கவச உடையுடன் வந்த மணமகள்!

 

கொரோனா வார்டில் திருமணம்…கவச உடையுடன் வந்த மணமகள்!

கொரோனா சிகிச்சை பெற்று வந்த மணமகனை மணமகள் கவச உடை அணிந்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கொரோனா வார்டில் திருமணம்…கவச உடையுடன் வந்த மணமகள்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தீவிரமாக இருந்து வருகிறது. இந்த சூழலில் ஆலப்புழா மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் மணமகனை , இளம்பெண் மருத்துவமனையில் வைத்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

கொரோனா வார்டில் திருமணம்…கவச உடையுடன் வந்த மணமகள்!

குட்டநாடு தாலுகா கைனாகரி கிராமத்தை சேர்ந்தவர் சரத் மோன். இவருக்கும் , இவரது அம்மாவுக்கும் கொரோனா உறுதியான நிலையில் அவர்கள் ஆலப்புழாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதனிடையே சரத் மோனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் குறிக்கப்பட்ட உரிய தினத்தில் திருமணம் நடத்த இரு வீட்டாரும் முடிவெடுத்ததனர். இதனால் நேற்று மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் மருத்துவமனை வளாகத்திற்குள் வந்த மணமகள் கவச உடை அணிந்து மணமகன் சரத் மோனை திருமணம் செய்து கொண்டார். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.