கோவையில் இங்கெல்லாம் நாளை கோவிட் டெஸ்ட் எடுத்துக்கலாம்!

 

கோவையில் இங்கெல்லாம்  நாளை கோவிட் டெஸ்ட் எடுத்துக்கலாம்!

கோவையில் தற்போது கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் பூஜ்ஜியம் என்ற நிலைக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் பல்வேறு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது.

கோவையில் இங்கெல்லாம்  நாளை கோவிட் டெஸ்ட் எடுத்துக்கலாம்!

தமிழகத்தில் கொரோனா பரவத் தொடங்கிய நிலையில் கோவையிலும் வேகமாக பரவியது. மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கை காரணமாக கொரோனாத் தொற்று பூஜ்ஜியம் என்ற நிலையை அடைந்தது. தமிழகத்தின் பிற பகுதிகளில் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டு வந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனாத் தொற்று இல்லை என்ற நிலை இருந்தது. இதனால் மற்ற மாவட்டத்தினர் கோவை ஏக்கத்துடன் பார்க்கும் நிலை இருந்தது. தற்போது சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து கோவைக்கு பலரும் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். இதனால் கோவையில் கொரோனாத் தொற்று அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

கோவையில் இங்கெல்லாம்  நாளை கோவிட் டெஸ்ட் எடுத்துக்கலாம்!

இன்று ஒரு வயது குழந்தை உட்பட 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 920 ஐ தாண்டியுள்ளது. இதுவரை மாநகராட்சி பகுதிகளில் தொற்று அதிகரித்து வந்த நிலையில், இன்று பொள்ளாச்சி, அன்னூர் ஆகிய புறநகர பகுதிகளில் தொற்று அதிகமாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்நிலையில் அட்டவணையில் கொடுக்கப்பட்டிருக்கும் கீழ்கண்ட இடங்களில் கோவை மக்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.