கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபரை 15 நாட்களாக காணவில்லை : அதிர்ச்சியில் போலீசார்!

 

கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபரை 15 நாட்களாக காணவில்லை : அதிர்ச்சியில் போலீசார்!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரம், ஜின்ஸி சௌராய் பகுதியைச் சேர்ந்த நரேந்திரருக்கு சளி, இருமல் மற்றும் மூச்சு திணறல் காரணமாக கொரோனா சோதனைக்காக கடந்த 31 ஆம் தேதி காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபரை 15 நாட்களாக காணவில்லை : அதிர்ச்சியில் போலீசார்!

இதையடுத்து அவரை கடந்த 1 ஆம் தேதி முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் ஜூன் 6ம் தேதி மங்கல்ஹட் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபரை 15 நாட்களாக காணவில்லை : அதிர்ச்சியில் போலீசார்!

இதுகுறித்து கூறும் மங்கல்ஹட் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ரனாவீர் ரெட்டி, “மருத்துவமனை வளாகத்தில் எங்களது குழுவினர் மூன்று முறை சோதனை செய்துவிட்டனர், ஆனால் நரேந்தர் எங்கு இருக்கிறார் என்பது இன்னும் தெரியவில்லை. சிசிடிவி கேமிராக்களிலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.