“மெடிசன் கொடுப்பது போல மேலே கை வைப்பார்” -கொரானா சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு ஊழியரால் நடந்த கொடுமை
கொரானா சிகிச்சைக்கு வந்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சுகாதார ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள கோட்டயம் மாவட்டத்தில் ஒரு 14 வயதான பெண் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அங்குள்ள ஒரு ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் .அவர் நாட்டகோமில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார் .அப்போது அவரை சுகாதார ஊழியர் சச்சின் என்ற 26 வயதான வாலிபர் கவனித்து வந்தார் .அப்போது அந்த சச்சின் அவரிடம் ஆபாசமாக பேசியுள்ளார்
மேலும் அவரை ஜூன் 17 இரவு பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் .இதனால் அந்த பெண் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார் .இதனால் அவர் இதை அவரின் உறவினர்களிடம் கூறினார்
அடுத்த நாள் (ஜூன் 18), சிங்கவனம் போலீசாருக்கு அவரின் உறவினர்கள் மூலம் இந்த வன்கொடுமை பற்றி தகவல் கிடைத்தது.உடனே போலீசார் அந்த சிகிச்சை மையத்துக்கு சென்று ,அந்த டீனேஜ் பெண்ணின் அறிக்கையை பதிவு செய்தனர் . அந்த பெண்ணை கொரானாவிலிருந்து குணமடைந்த பிறகு, அவரை போலீசார் கௌன்சிலிங்குக்கு கூட்டி சென்றனர் . அந்த கவுன்சிலிங் அமர்வின் போது, சுகாதார ஊழியர் சச்சின் தன்னிடம் அநாகரீகமாக பேசினார் என்றும் ஜூன் 17 இரவு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் கூறினார்.அதனால் போலீசார் அந்த ஊழியர் சச்சின் மீது வழக்கு பதிந்து சிறையிலடைத்தனர் .