இந்தியாவில் 24 மணிநேரத்தில் 22, 752 பேருக்கு கொரோனா உறுதி: 482 பேர் உயிரிழப்பு!

 

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 22, 752 பேருக்கு கொரோனா உறுதி:  482 பேர் உயிரிழப்பு!

இதுவரை உலகம் முழுவதும்1 கோடியே 19 லட்சத்து 48 ஆயிரத்து 244 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 5 லட்சத்து 46 ஆயிரத்து 547 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 68லட்சத்து 49 ஆயிரத்து 076 பேர் குணமாகியுள்ளனர்.

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 22, 752 பேருக்கு கொரோனா உறுதி:  482 பேர் உயிரிழப்பு!

இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் அன்லாக் 2.0 ஆரம்பித்து விட்டது. இருப்பினும் அந்தந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மாநில முதல்வர்களே ஊரடங்கை நீடித்து வருகின்றனர்.

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 22, 752 பேருக்கு கொரோனா உறுதி:  482 பேர் உயிரிழப்பு!

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 7,19,665 லிருந்து 7,42,417 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4, 56, 831பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20, 642 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . இந்தியாவில் 24 மணிநேரத்தில் 22, 752 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 24 மணிநேரத்தில் 482 பேர் பலியாகியுள்ளனர்.